சிதம்பரம், ஜூன் 2- கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதியில் பொதுமுடக்க காலத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மன அழுத் தத்தை போக்குவதற்கும், அவர்களின் திறமையை வெளிபடுத்தும் வகையில் பரங்கிப்பேட்டை காவல் நிலையம் மற்றும் சமூக ஆர் வலர்கள் குழுக்கள் இணைந்து 'உங்கள் திற மையை எங்களிடம் காட்டுங் கள்' என்ற தலைப்பில் போட்டி நடத்தபட்டது. இதில் பங்கு பெற்ற குழந்தைகள் ஓவியம், நட னம், பாட்டு, கதை, விளை யாட்டு, கவிதை என தங்க ளது திறமைகளை வீட்டில் இருந்தவாறே வாட்ஸ் அப் மூலம் வெளிப்படுத்தினர். இதில் கலந்து கொண்ட அனைத்து குழந்தை களுக்கும் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் சான்றிதழ், மரக்கன்று பதக்கம் ஆகிய வற்றை வழங்கினார். இதில் காவல் ஆய்வாளர் பாண்டிச் செல்வி, உதவி ஆய்வாளர்கள் பொன்மக ரம், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.