போலந்து நாட்டின் பொதுவுடைமை
பூங்காவி லிருந்து புறப்பட்டதே
ஜெர்மனியிலே கம்யூனிஸ சித்தாந்த
மணம் பரப்பிடவே செம்மல ரொன்று
சுரண்டப் படும்உழைக்கும் வர்க்கம்
முதலாளித்துவ ஆக்டோபஸ் பிடியினின்று
விடுவித்திட போராடியதே களம்நின்று!
ஆணுக்கு நிகர்பெண்னென உரிமைகள்
பெண்களின் விடுதலை வேண்டி
கிளாரா ஜெட்கினுடன் முடிவெடுத்து
நின்றது இரண்டாம் அகிலத்திலே .
உழைக்கும் தொழிலாளர் மனதினிலே
போராட்ட உணர்வினை ஊட்டியதனாலே
ஜெர்மானிய கொடுங்கோல் ஆட்சிதானே
நின்னை சிறையில் அடைத்து தனது
கொடூரக் கரங்களால் மூர்க்கத் தனமாய்
தாக்குதல் தொடுத்தும் கொண்ட கொள்கையால்
எதிர்கொண்ட மனவுறுதி யினாலே நிலைகுலைந்தே
காவலர்கள் சிலரால் உந்தன் தலையிலே
துப்பாக்கி யின்தோட்டாக் களால்உன்
இறுதி மூச்சினை நிறுத்தினரே
அழிக்கப் பட்டது உன்னுடல்மட் டும்தானே
நிலைத்து நிற்பது நீவகுத்த கொள்கைகளே
நாங்கள் நடப்போம் நீயெமக்கு விட்டுச்
அடிச்சுவற் றினைபின் பற்றியே.
தோழர் ரோசாலக்ஸம்பர்க் சிறையில் அடைக்கப்பட்டு முர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டும்
தலையில் துப்பாக்கியால் சுட்டும் மாய்க்கப்பட்டார்
சிந்துபூந்துறை வி.சண்முகம்