திருப்பூர், டிச.11- போதையில்லா திருப்பூர்; நெகிழிப்பை இல்லா திருப்பூர் என்று பாலர்கள் சங்க மத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மகாகவி பாரதியார் பிறந்தநாளில் திருப்பூரில் பாலர் பூங்கா நடத்திய விழிப் புணர்வு அணிவகுப்பை திருப்பூர் நொய்யல் ஆற்று பாலம் அருகே வளர்மதி பேருந்து நிறுத்தத்தின் முன்பாக கிட்ஸ் கிளப் பள்ளி களின் தாளாளர் மோகன் கார்த்திக் துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள் பாரதியார் முக உருவப் படத்தை தங்கள் முகத்தில் அணிந்து கொண்டு கம்பீரமாக அணிவகுத்தனர். இந்த அணிவகுப்பு மாநகராட்சி சாலை வழியாக மங்களம் பாதை, டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளா கத்தை அடைந்தது. இங்கு நடைபெற்ற விழாவில் “போதை யில்லா திருப்பூர், நெகிழிப்பை இல்லா திருப்பூர்” என்ற தலைப்பில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த விழாவில் திருப்பூர் கண்ணன் மருத்துவமனை மருத்துவர் சு.முத்துசாமி, தன் சுத்தம் பேணுதல் பற்றி கருத்துரையாற்றி னார். ஈரோடு சிறார் எழுத்தாளர், கதை சொல்லி சி.சரிதா ஜோ, கதை பேசப் போறோம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு கதை சொல்லி மகிழ்வூட்டினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் திண்டுக்கல் ம.வீரய்யா மேஜிக் ஷோ நடத்தி குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை தூண்டினார். பாலர் பூங்கா அமைப்பின் மாநிலப் பொறுப்பாளர் என்.அமிர்தம் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசளித்து பாராட்டிப் பேசினார். பாலர் பூங்கா நடத்திய இந்த நிகழ்வில் 450-க்கும் மேற்பட்ட சிறார்கள், குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.