tamilnadu

img

தமிழகத்தில் மூலப்பொருட்கள் விலை மூன்று மடங்கு உயர்வு சிறு, குறு தொழில்கள் அழியும் நிலையில் உள்ளன

கரூர், மே 9- கரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக்குழு சார்பில் கட்டப்பட்ட புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு குளித்தலை ஒன்றியச் செயலாளர் எஸ்.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன் வரவேற்று பேசி னார். தோழர் கே.வரதராஜன் நினைவு அலுவ லகத்தை மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார்.  மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தோழர் கார்ல் மார்க்ஸ் படத்தை திறந்து வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன் தோழர் உமாநாத் படத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு தோழர்  என்‌.வரதராஜன் படத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ தோழர் ஜெயவீரன் படிப்பகத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கந்தசாமி, ஜி.ஜீவானந்தம், கே.சக்திவேல், சி.முருகே சன், பி.ராமமூர்த்தி, சி.ஆர்.ராஜாமுகமது மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றி யச் செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

‘தருமபுர ஆதீன விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்ச்சி பெரிய சர்ச்சை க்கு உள்ளாகியுள்ளது. இதை விரும்பிதான் தூக்குகிறார்கள் என்பது ஏற்புடையதல்ல. தனி மனிதனை தூக்குவது பண்ணை அடி மைத்தனத்தின் அடையாளம். தருமபுர ஆதின மடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி இல்லை. இதில் பாஜக அரசியல் செய்கிறது. தூக்க அனுமதிக்க வில்லையென்றால் நானே போய் தூக்கு வேன் எனக்கூறுகிறார் அண்ணாமலை. மாநில பாஜக இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். 

பழைய ஓய்வூதியத்  திட்டத்தை செயல்படுத்துக!

நிதிச்சுமை இருக்கும் நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது என தமிழக நிதியமைச்சர் கூறி யிருக்கிறார். முதல்வர் தேர்தல் நேரத்தில் கூறியிருக்கும் வாக்குறுதியை நிறைவேற்று வோம் எனக் கூறி வருகிறார்.  ஆனால், முதல்வரின் கருத்துக்கு மாறாக நிதிய மைச்சர் கூறுவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இதனை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.  நீதிமன்றங்கள் நீர்நிலைகளில் குடியி ருக்கும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடித்து காலி செய்யும் நடவடிக்கை தொடர் கிறது. நகர வளர்ச்சியில் நீர்நிலைகளுக்கு வரும் வரத்து வாய்க்கால் தூர்ந்துபோய் விட்டது, விவசாய நிலங்கள் வீடுகளாக மாறிவிட்டன. இதனை கருத்தில்கொண்டு ஆய்வு செய்யாமல் இடிக்க உத்தரவிடுவது நியாயமான தீர்ப்பாக கருதமுடியாது. 

மதுரை நீதிமன்றம், விழுப்புரம் ஆட்சி யர் அலுவலகம், பேருந்து நிலையம், சென்னை போரூர் வணிக வளாகம், நீதிபதி கள் குடியிருப்பு, அமைச்சர்கள் குடியிருப்பு போன்றவையும் நீர்நிலை புறம்போக்குத் தான். அரசு தேர்வு தொடங்கும் நேரத்தில் ஒரு ஏழை வீட்டை இடிக்கப்போகிறோம் எனக் கூறினால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாதா?. இதில் இருந்து மக்களை  காப்பாற்ற அரசு மாற்று வழியை யோசிக்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை தான் ஏற்படும். 

மூலப்பொருட்கள் விலை  மூன்று மடங்கு உயர்வு

தமிழகத்தில் மூலப்பொருட்கள் விலை மூன்று மடங்கு உயர்ந்துவிட்டதால் சிறு, குறு தொழில்கள் அழியும் நிலை ஏற்பட்டுள் ளது. நூல் விலை உயர்வால் ஜவுளி ஆலை கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவையிலோ மற்ற இடங்களிலோ ஜவுளி தொழில் நடப்பதை ஒன்றிய அரசு விரும்ப வில்லை. இதனால் அவர்கள் ஜவுளித் தொழிலை குஜராத்திற்கு கொண்டு செல்வ தற்காக நூல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.  சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது. செஸ் வரி போட்டு ஒன்றிய அரசு மக்களை கொள்ளை யடிக்கிறது. செஸ் வரி மூலம் ரூ.28 லட்சம் கோடி வருவாயை ஒன்றிய அரசு ஈட்டி யுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யவே இந்த செஸ் வரி விதிப்பு.  நிதி நெருக்கடி எனக் கூறும் தமிழக அரசு கனிம வளங்களை சீரமைத்தாலே போதிய வருவாய் கிடைக்கும். ஆனால் தனியாருக்கு மணல் குவாரிகளை கொடுக்க அரசு முடி வெடுத்துள்ளது. மாட்டு வண்டியில் மணல் எடுப்போருக்கு குவாரியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.