tamilnadu

img

தோழர் எல்.ஜோன்ஸ் எல்.ஐ.சி பணி நிறைவு பாராட்டு விழா

தோழர் எல்.ஜோன்ஸ்  எல்.ஐ.சி பணி நிறைவு பாராட்டு விழா

திருச்சிராப்பள்ளி, மே 31-  காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சைக் கோட்ட துணைத்தலைவர் எல். ஜோன்ஸ் எல்.ஐ.சியில் கடந்த 35 ஆண்டுகளாக பணிபுரிந்து சனிக்கிழமை அன்று தனது பணியை நிறைவு செய்தார். தோழர் ஜோன்ஸ் பணி நிறைவு பாராட்டு விழா சனிக்கிழமை, திருச்சி அஜந்தா ஓட்டலில் நடைபெற்றது. விழாவிற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சேதுராமன் வரவேற்றார். தென் மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு மேனாள்  பொதுச்செயலாளர் சுவாமிநாதன், இணைச் செயலாளர் ஜானகிராமன், தீக்கதிர் முன்னாள் தலைமை பொதுமேலாளர் சீனிவாசன், மூத்த தோழர் இலக்குவனன், சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம், ஏ.ஐ.ஐ.பி.ஏ தஞ்சை கோட்டச் செயலாளர் புண்ணியமூர்த்தி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், எம்.ஆர்.ஜி.ஐ.இ.ஏ இணைச்செயலாளர் முத்துக்குமரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.  தோழர் ஜோன்ஸ் ஏற்புரை வழங்கினார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.