tamilnadu

தேர்வு வினாத்தாள் வெளியானதில் கல்லூரி முதல்வர் கைது

காந்திநகர்,டிச.25- குஜராத்தில் தேர்வு வினாத்தாள் வெளியானதால், கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தின்  இறுதியாண்டு பி.காம் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடத்தப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெளியானது.  மேக்ரோ எகனாமிக்ஸ் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் பகி ரப்பட்டதை அடுத்து ராஜ்கோட்டில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டது. இந்த நிலையில் அம்ரேலியில் உள்ள சர்தார் படேல் சட்டக் கல்லூரி முதல்வர், அதன் இரண்டு ஊழியர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வினாத்தாள் வெளியான தேர்வு மட்டும் ஜனவரி 3 அன்று நடைபெறும் என்று சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிதின் பெத்தானி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் 4 மாநி லங்களில் 1.07 லட்சம் வீடுகள் கட்ட ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான பெற்றோ ரின் ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சிக்கான வார்டு மறுவரையறை ஆணையத்தின் கூட்டம் டிசம்பர் 27 திங்கட்கிழமை யன்று  நடைபெற உள்ளது.