1000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க ஆட்சியர் உறுதி! கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சங்கப் போராட்டம் வெற்றி
கிருஷ்ணகிரி, மே 29 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டம் காரணமாக, 1000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். ஓசூர் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி வட்டத்தில் 2000 ஏக்கர் பைமாசி சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; பட்டியல் - பழங்குடியினர் மற்றும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்; தென்பெண்ணை ஆற்றின் நீரில் கலக்கும் ரசாயன கழிவுகளை தடுக்க வேண்டும்; காவிரி வனச் சர ணாலயம் பகுதியில் அமைந்துள்ள 165 கிராம மக்களை வெளியேற்றக் கூடாது; தென்பெண்ணை ஆற்று நீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வாழ்வுரிமை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் பெருமாள், மாவட்டத் தலைவர் முருகேஷ், பொருளாளர் எம். ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெ. சண்முகம் பங்கேற்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.கே. தேவராஜ், ஒன்றியச் செய லாளர் முனிராஜ், வட்டப் பொரு ளாளர் ஆனந்தகுமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பெரியசாமி, அடிமனை பயனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் அனுப்பா, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர். ஆட்சியர் உறுதிமொழி ஆர்ப்பாட்டத்தின் முடிவில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சியர் பிரியங்காவிடம் பெ. சண்முகம் வழங்கினார். அப்போது தலைவர்களிடம் பேச்சு நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரியங்கா, மாநகராட்சி பகுதிக்கு அப்பாற்பட்டு சூளகிரி பகுதியில் தகுதியான 1000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், சரணாலயத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களை வனத்துறையினர் துன்புறுத்துவது குறித்து பேசித் தீர்வு காணப்படும் எனவும், தென்பெண்ணை ஆற்றுக் கழிவுநீர் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் எடுத்துரைத்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.