tamilnadu

img

தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

தருமபுரி, ஜூன் 1 – தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட் டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீர மைப்பை மேம்படுத்துதல் மற்றும் உயர்மட்ட  மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,ஆய்வு மேற் கொண்டார். தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்படும் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும்  வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய  சாலைப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தொப்பூர் காட்  பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டத் தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், மாவட்ட  ஆட்சியர்   சம்பந்தப்பட்ட துறை அலுவலர்க ளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், உயர் மட்ட மேம்பாலம் பகுதி  தொடங்கும் இடம், கட்டமேடு, ஆஞ்சநேயர் கோயில், சிறிய சுரங்கப்பாதை அமைவி டம், அதிக விபத்துகள் நடந்த இரட்டைப் பாலம், எலிவேட்டட் காரிடாரின் முடிவு  உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண் டார். மேலும், உயர்மட்ட மேம்பாலம் அமைக் கும் பணிகளை பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறின்றி, எவ்வித அசம்பாவிதங்களுமின்றி குறிப்பிட்ட கால வரைக்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தனைதொடர்ந்து, பாளையம்புதூர் சுங்கச்சாவடி அலுவலகத்தில் தொப்பூர் காட்  பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டம் செயற்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற் கொண்டார். இந்நிகழ்வுகளின் போது, தரும புரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, துணை  காவல் கண்காணிப்பாளர் (தருமபுரி) சிவரா மன், உதவி இயக்குநர் (புவியியல் (ம) சுரங்கத் துறை) இளைய செல்வி, பில்கான் நிறுவன  பணியாளர்கள், வனத்துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் இந்திய தேசிய  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனி ருந்தனர்.