சென்னை, ஜன. 1- ஒமைக்ரான் பரவலைக்கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:- உங்கள் எல்லோருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு சிறப்பாக அமையவேண்டும் என்பது தான் நம் எதிர்பார்ப்பு. அதனால் கடந்த ஆண்டு தந்த பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது. 2 அலைகளிலிருந்து நாம் மீண்டு வந்துள் ளோம். 2ஆம் அலை உச்சத்தில் இருக்கும் போதுதான் நான் முதல்வராக பொறுப் பேற்றுக் கொண்டேன்.
அமைச்சர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர், உள்ளாட்சி நிர்வா கத்தினர், காவல்துறையினர், தூய்மைப் பணி யாளர்கள் என்று பல்வேறு துறைகளை சேர்ந்த வர்கள் இணைந்து நின்று செயல்பட்டார்கள். அதனால் குறைந்த கால அளவிலேயே 2ஆவது அலையை கட்டுப்படுத்தினோம். அதற்கு பொதுமக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக இருந்தது. தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா பரவ லையும், இறப்பு எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடிந்தது. அதேபோல் ஒமைக்ரானை நாம் கட்டுப் படுத்த வேண்டும். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இந்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்து வரு கிறது. தமிழகத்தில் சிகிச்சைக்கு தேவையான எல்லா வசதிகளும் உள்ளதால் யாரும் அச்சப் படத் தேவையில்லை. உங்கள் ஒத்துழைப்பு தான் எங்களுக்குத் தேவை. ஒமைக்ரான் பரவ லைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுங்கள். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.