மயிலாடுதுறை, அக்.21 - கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் வசிக்கும் கரையோர கிராமங் கள் நீரில் மிதக்கின்றன. சாலைகள் அனைத்தும் கடல்போன்று காட்சி யளிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூரிலிருந்து காவிரியில் அதிகப்படியான நீர் வெளி யேற்றப்படுகிறது. இத னால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. தண்ணீர் வரத்து படிப்படி யாக உயர்ந்து கொண்டி ருப்பதால், கொள்ளிடம் அரு கே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல், கீழவாடி ஆகிய கிராமங்களில் 300- க்கும் மேற்பட்ட வீடுகளில், ஆற்று நீர் சூழ்ந்ததால் அப்பகுதி யை சேர்ந்த மக்கள் நீரில் தத்தளிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் படகின் மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டு கொள் ளிடம், அனுமந்தபுரம் மற்றும் ஆச்சாள்புரம் ஆகிய பகுதி களில் உள்ள சிறப்பு முகாம் களில் தங்க வைக்கப்பட்ட னர். குறிப்பாக நாதல்படு கை, முதலைமேடு திட்டு, அளக்குடி ஆகிய கிராமங் களை வெள்ள நீர் சூழ்ந்து ள்ளது.
“மேட்டூர் அணையில் அதிகளவு தண்ணீர் திறக்கப் படும் போதெல்லாம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் படுகை பகுதியில் உள்ள கிராமங்கள் நீரில் தத்தளிப்பது வாடிக்கை யாகி வருகிறது. மேலும் கரையோர கிராமங்களில் உள்ள விவசாய நிலங் களும் நீரில் மூழ்கி பயிர் கள் அழுகிப் போவதும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. பல திட்டங்க ளை அறிவித்தாலும் எந்த வித பலனும் இதுவரை இப் பகுதி மக்களுக்கு கிடைக்க வில்லை. இந்த ஆண்டி லேயே 5 ஆவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ள்ளது. உடனடியாக நிவா ரண முகாம்களை அதிகப் படுத்திட வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்ளிடம் ஒன்றி யச் செயலாளர் கேசவன் கோரிக்கை விடுத்துள்ளார். கீழவாடி கிராமத்தில் உள்ள 36 வீடுகளைச் சேர்ந்த வர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டு, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அதே போன்று மகேந்திரப் பள்ளி கிராமத்தில் உள்ள கத வணையிலிருந்து தண்ணீர் வெளியேறியதால், கொள்ளி டம் ஆற்றின் கரையோரம் 300 ஏக்கரில் செய்யப்பட்டி ருந்த நேரடி விதைப்பும் தண்ணீரில் மூழ்கி அழுகிக் கொண்டிருக்கிறது. ஆற்றின் மையப்பகுதி யில் இருந்த திட்டில் மான்கள் வசித்ததாகவும், அவை நீரில் அடித்து செல்ல ப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் கூறுகின்றனர். கால்நடைகள், உடைமை கள் என அனைத்தையும் தொலைத்து நிற்கும் வேளை யில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையும் மக்க ளை மேலும் இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
அளக்குடி கிராமத்தில் கொள்ளிட ஆற்றின் கரை வலுவிழந்து உள்ளதாகவும், நீர் அதிகளவு வருவதால் கரை உடைந்துவிடுமோ என்ற அச்சம் மக்களை ஆட்கொண்டுள்ளது. ஒவ் வொரு முறையும் வெள்ள பாதிப்பு ஏற்படும் போதெல் லாம் மணல் மூட்டைகளை யும், மரங்களையும் வைத்து அடைப்பை சரி செய்வதற்கு பதிலாக நிரந்தர தீர்வுக்கான திட்ட த்தை தமிழக அரசு மேற் கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கூறுகின்றனர். இதனிடையே பாதிக்க ப்பட்ட பகுதிகளை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாதல்படுகை, துளசேந்திரபுரம், வட வரங்கம், கீழவாடி, மாதிரி வேளுர், அளக்குடி, முதலை மேடுதிட்டு ஆகிய முகாம் களில் தங்க வைக்கப் பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர் களின் தேவைகளை கேட்ட றிந்து, உணவு சமைக்கும் கூடத்தையும் பார்வை யிட்டார். மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை முறையாக வழங்க வேண்டு மென உத்தரவிட்டார். மாவட்டத்தின் பிற பகுதிகளை பார்த்தால் தீபாவளி பண்டிகையை யொட்டி மக்கள் கூட்டம் கூட்டமாக ஜவுளி கடை களின் பைகளோடு பரபரப் பாக செல்கின்றனர். அதே நேரத்தில் கொள்ளிட கரை யோரத்தில் வாழும் ஏழை மக்களின் வீடுகள் நீரில் மூழ்கிப் போக, அவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதி களை சிபிஎம் மயிலாடு துறை மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் கேசவன் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து பார்வையிட்டு மக்களின் தேவைகள் குறித்து கேட்ட றிந்து வருவது குறிப்பிடத் தக்கது.