tamilnadu

‘கோவாவில் கூட்டணி ஆட்சிக்கும் தயார்’

பனாஜி, மார்ச் 7- நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மார்ச் 10-ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது. கோவா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதி நெருங்கி வரும் நிலை யில், “தனிப்பெரும்பான்மை கிடைக்கா விட்டால் பாஜகவைத் தவிர மற்ற கட்சிகளு டன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கத் தயாராக இருப்ப தாக” காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கோவா மாநிலப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், “தங்களது கட்சி பெரும் பான்மையான 21 இடங்களுக்கு குறைவாகப் பெற்றால் ஆம் ஆத்மி  (ஏஏபி) போன்ற கட்சி களின் ஆதரவைப் பெற தயாராக உள்ளது. இறுதி முடிவு வெளியான பிறகு, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி அதன் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நேரத்தை வீணடிக்காது. காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்தால், அன்றைய தினமே ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்” என்றார். இந்தத் தேர்தலில் கோவா பார்வர்டு கட்சி யுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டி யிட்டது.  மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங் கிரஸ், கோவாவின் எம்ஜிபியுடன் கூட்டணி வைத்தது.