tamilnadu

img

பாஜகவை டெபாசிட் கூட வாங்க விடக் கூடாது

திருப்பூர், செப்.24-  மக்களுக்கான வாக்குறுதி களை நிறைவேற்றாத பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ கத்தில் டெபாசிட் கூட வாங்க விடக் கூடாது என்று  திருப்பூர் தொட்டிய பாளையத்தில் நடைபெற்ற கூட்டத் தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் தொட்டியபாளையத்தில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பா ளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டம் செப்டம்பர் 24 ஞாயிறன்று நடை பெற்றது.   இக்கூட்டத்தில்  திமுக தலை வரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைவருக்கும் பொதுவான மக்க ளாட்சியை நாம் நடத்துவதால், யாரும் நம்மை நிராகரிக்க முடி யாது. தமிழகத்தில் ஏதாவது ஒரு விதத்தில் மக்கள் பயன்பெறும் வகையிலான ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. தேர்தல் வாக்கு றுதியில் மிகப்பெரியது கலைஞர்  உரிமைத் தொகை திட்டம். அது  இன்றைக்கு நிறைவேற்றப் பட்டுள்ளது. அதன்பின்னர் பல மடங்கு வரவேற்பு நமக்கு கிடைக் கிறது. கட்டணமில்லா பேருந்து திட்டத்திலும் பெண்கள் பயன் பெற்றுள்ளனர். 

திருப்பூரை ‘டல்’ சிட்டியாக மாற்றிய பாஜக அரசு 

ஆனால் மத்தியில் இரண்டாவது முறையாக ஆளும் மோடி அரசு, மூன்றாவது முறையாக வர ஆசைப்படுகிறார்கள். அவர்கள் வரக்கூடாது. கொள்ளையடிக்கும் அரசாக ஒன்றிய பாஜக அரசு உள் ளது. விவசாயிகளின் வரு மானத்தை இரண்டு மடங்கு ஆக்கு வோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என மோடி சொன்னார். இவற்றையெல் லாம் செய்தாரா? நம்முடைய பட்ட தாரி இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார். 2024- 2025 ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத் தில் 5 டிரில்லியன் டாலராக மாற்று வோம் என்று சொன்னார்கள். இன்றைக்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பால் கோவை,  திருப்பூர் நகரங்கள் நொடிந்து போய்விட்டன. டாலர் சிட்டி திருப்பூர் இன்றைக்கு டல் சிட்டியாக மாறி விட்டது. ஒன்றிய  பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை யால் கோவை மாநகரம் திறனற்ற மாநகராக தேய்பிறையாகிவிட்டது. சேலம் உருக்காலையை நவீனப் படுத்துவோம், ஜவுளி சந்தைக்கான உட்கட்டமைப்பை ஈரோட்டில் மேம்படுத்துவதாக ஒன்றிய பாஜக அரசு வாக்குறுதி தந்தது. ஈரோடு மஞ்சளை இந்தியாவே நேசிக்குது. ஆனால் அந்த தொழில் மோச மடைந்துவிட்டது. மோடி டிசைன், டிசைனாக கொடுத்த வாக்குறுதி கள் என்னாச்சு? வெறும் வாக்குறுதி களாக மட்டுமே இன்னும் உள் ளன. சந்திரயான்விட்டதும்,

ஜி-20  மாநாட்டையும் மோடி பெருமை யாக சொல்கிறார். சுழற்சி அடிப் படையில் ஜி.20-க்கு இந்தியா தலை மை தாங்கியது. நிலவை நோக்கிய பயணம் பாஜகவின் சாதனை அல்ல. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பலரின் விண்வெளி ஆராய்ச்சி பங்கு இதில் உண்டு. ஆகவே தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்து பாஜக கணக்கு காட்டப் பார்க்கிறது. ஆனால் அத னையும் உடனடியாக வழங்க வில்லை. 2029 ஆம் ஆண்டு தான் வழங்குவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை, தமிழ கத்தில் டெபாசிட் கூட வாங்கவிடக் கூடாது. அதிமுகவின் ஊழலுக்கும், பாஜகவின் மதவாதத்துக்கும் இரு வரும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி துணை நிற்கின்றனர். எடப்பாடி பழனிசாமி ஊழல் வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே தில்லி சென்று அமித்ஷாவை சந்தித் தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதி முக ஆதரவுக்கரம் தருகிறது. சட்டப் பேரவைக்கும் தேர்தல் வந்தால், அதிமுகவின் இன்றைய நிலையும் போய்விடும். நாடாளுமன்றத் தேர்த லில் பாஜக படுதோல்வி அடைய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.