tamilnadu

img

வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன; மழை வெள்ளத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்

சென்னை,அக்.16- மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், சென்னையில் முத லமைச்சரும், துணை முதலமைச்ச ரும் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். இரண்டாவது நாளாக (அக்டோ பர் 16) சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் நாராயணபுரம் ஏரியில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமை ச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறுகையில், “சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை  கொடுத்துள்ளன. நீங்கள் மக்களி டமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். கடந்த 3 மாதங்களாகவே மழை வெள்ளம் தொடர்பான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறோம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்து ஆட்சிக்கு வந்த போதே இதற்கான பணிகளில் இறங்கி னோம். கொஞ்சம் கொஞ்சமாக பணி களை செய்து வருகிறோம். ஒரேயடி யாக எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஆனால் நிச்சயமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக வேலை செய்து கொண்டி ருக்கிறார்கள். முன் களப்பணி யாளர்கள் அத்தனை பேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன்”என்று கூறினார்.