tamilnadu

img

தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் வருகிறார்

சென்னை,ஜன.23- ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் போட்டியிடு கிறார். திங்களன்று (ஜன.23)  அண்ணா அறிவால யத்துக்கு வந்த இளங் கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவரு டன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கோபண்ணா, சட்டமன்றகட்சித் தலைவர்  செல்வப் பெருந்தகை உள் ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியா ளர்களை சந்தித்த  இளங்கோ வன், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த திமுக தலை வர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தோம். தேர்தல்  பிரச்சாரத்துக்கு மு.க.ஸ்டா லின் அவசியம் வர வேண்டும் என்றும் கேட்டுக்  கொண்டோம். அவரும்  வருவதற்கு ஒப்புக்கொண் டார்”என்றார்.