tamilnadu

img

பரவை காய்கறி மார்க்கெட் மூடல்

மதுரை, ஜூன் 14 மதுரை பரவை மொத்த காய்கறி மார்க்கெட்டு  காலலரையின்றி மூடப்படு வதாக சங்க தலைவர்  ஜெ மனுவேல் ஜெய ராஜ்  ஞாயிறன்று  விடுத்துள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். அதன் விபரம்:   மதுரை மாவட்ட நிர்வாகமும்  மாநக ராட்சியும்  கொரோனா தடுப்பு நடவடிக்கை களை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலை யில் மதுரையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது வருத்தமளிக்கிறது. குறிப்பாக எங்களது பரவை காய்கறி மார்க்கெட் வணிக வளா கத்தில் பணியாற்றிய ஒருசிலருக்கு தற் போது கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மார்க்கெட் வளாகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநக ராட்சி உதவியுடன் கிருமி நாசினி தெளிக் கப்பட்டு உள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை மார்க்கெட்டை முழுமையாக மூடுவது என எங்கள் சங்கம் முடிவு செய் துள்ளது. இன்று (14.6-2020 )  முதல் பரவை காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் அரசின் மறு உத்தரவு வரும்வரையில்  செயல் படாது.  மார்க்கெட் வணிக வளாகம்மீண்டும் திறக்கப்படும் வரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஒத்துழைப்புடன் பரவை மார்க்கெட் அருகே தற்காலிகமாக  நான்கு திறந்தவெளி மைதானங்களில் காய்கறி மார்க்கெட் திங்கட்கிழமை (15.6.2020)  முதல் செயல்பட உள்ளது என்பதை காய்கறி மொத்த வணிகர்களுக்கும் சிறு வணிகர் களுக்கும் இந்த பத்திரிக்கை செய்தி வாயி லாக தெரிவித்துக் கொள்கிறோம்.