tamilnadu

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கின

திருவள்ளூர், பிப்.28- திருவள்ளூர் மாவட்டம் திருநின்ற வூர் அருகே செயல்படும் சேவாலயா தொண்டு நிறுவனத்தின் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி வளா கத்தில் 2 ஆயிரம் வளரிளம் பெண் குழந் தைகளுக்கான மருத்துவ சுகாதார விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சேவாலயா மற்றும் அமிர் தாஞ்சன் நிறுவனம் ஆகியவை சார்பில் நடந்த  இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  பங்கேற்று, ஊட்டச் சத்து  உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் மா.  சுப்பிரமணியன், “தமிழகத்தில் இதுவரை யில் 92 விழுக்காட்டினருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்தில் 9.94 கோடி  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளன. இந்த எண்ணிக்கை, அடுத்த வாரத்தில் 10 கோடியை எட்டும்” என்றார். ஏற்கனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரத மரால் காணொலி காட்சி மூலம் திறந்து  வைக்கப்பட்ட திருவள்ளூர் அரசு மருத்து வக் கல்லூரியில் 150 மாணவர்களின் சேர்க்கை முடிவுற்று வகுப்புகள் தொடங் கியது” என்றார். நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் சா.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி, சென்னை மாநகராட்சியின் முன்னாள் சுகாதார அலுவலர் டாக்டர் பி.குகானந்தம், சேவா லயா நிர்வாகி முரளிதரன், அமிர்தாஞ் சன் நிறுவன பொதுமேலாளர் (மார்க் கெட்டிங்) சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.