tamilnadu

img

சிஐடியு மாநாடு எழுச்சித் துவக்கம்

சாதி, மதப் பிரிவினைகளை முறியடித்து அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்துவோம்: ஏ.கே.பத்மநாபன்

மாநாட்டு செங்கொடியை இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் ஏற்றி வைத்தார். (வலது) மாநாட்டைத் துவக்கி வைத்து  சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உரையாற்றினார்.

கன்னியாகுமரி (தோழர் கே.வைத்தியநாதன், எஸ்.பஞ்சரத்தினம் நகர்), நவ.4- இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)  15வது மாநில மாநாடு பேரெழுச்சியுடன் கன்னியாகுமரி யில் நவம்பர் 4 வெள்ளியன்று துவங்கியது.  தியாகச்சுடர்களின் சங்கமம், தியாகிகளுக்கு செவ்வணக்கம், செங்கொடி ஏற்றம் ஆகிய உணர்ச்சி மிகு துவக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாநில மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:  சிஐடியு 5 ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்ட த்தில் வெற்றிகரமாக நடந்தது. இப்போது 15 ஆவது மாநாடு இங்கு நடைபெறு கிறது. இந்த கால இடைவெளியில் எண்ணற்ற நிகழ்வுகள் நடந்துள் ளன. ஏறத்தாழ 40 ஆண்டு காலத்தில் நம்மோடு பணியாற்றிய பல தோழர்கள், நினைவாக நம்மோடு இருக்கிறார்கள். தமிழகத்தின் தியாகிகளையும் தலைவர்களை யும் நாம் நினைவுகூர்ந்தோம். அவர்கள் காட்டிய பாதையில் நமது பணிகளை முன்னெடுத்துச் செல்வோம். அனைத்து மாவட்ட மாநாடுகள், சிஐடியுவுடன் இணைந் துள்ள சம்மேளனங்களின் மாநாடுகளை நடத்தி முடித்துவிட்டு இங்கே  கூடியிருக்கிறோம்.

நம்முடைய ஒட்டுமொத்தமான கருத்துகளை, நிகழ்வுகளை போராட்டங்களை, படிப்பினை களை ஒருமுகப்படுத்தி இங்கே வருகை தந்துள்ள தோழர்கள் பல்வேறு துறைகளில் ஒன்று பட்டு ஆட்சியாளர்களின் கொள்கை களை எதிர்த்து, தனியார் முதலாளி களை எதிர்த்துப் போராடியவர்கள்; பொதுத்துறையை சார்ந்த, கூட்டுற வுத்துறையை  சார்ந்த, தனியார்  துறையைச் சார்ந்த, முறைசாரா  தொழிலாளர்களின் உரிமைகளுக் காக ஒன்றிணைந்து நின்று ஒன்றிய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடியவர்கள். நம்முடைய ஒற்றுமையான போராட்டங்கள் மூலமே உரிமைகளை வென் றெடுக்க முடியும் என்பதை உணர்ந்த வர்கள்தான் இங்கே அமர்ந்திருப் பவர்கள். தமிழகத்தில் முதல் தொழிற் சங்கம் தொடங்கி 104 ஆண்டுகள் ஆகிறது. சங்கங்கள் பல மாறினா லும் செங்கொடி பதினெட்டுடை யாள் சிந்தனை ஒன்றுடையாள் என்று உறவாடிக் கொண்டிக்கிறோம்.

சாதியாக மதமாக மொழியாக இந்தியாவில் உழைக்கின்ற மக்களை பிரிக்கும் முயற்சிகள் எங்கிருந்து வந்தாலும், யாரிட மிருந்து வந்தாலும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட குரல் அதை எதிர்த்துப் போராடி தடுத்து நிறுத்தி  முறியடிக்கும் என்பதற்கு தமிழகமே முன்னு தாரணமாக விளங்குகிறது. கடந்த சிஐடியு மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்த போது அதில் பங்கேற்ற தோழர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். கடந்த இரண்டாண்டுகளை இழந்தோம்; கொரோனா ஏராளமானோரை நம்மிடமிருந்து பறித்துச் சென்றது. உலகம் முழு வதும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்தது. தனியார் துறைகளை சார்ந்து நிற்கும் எத்தனை பெரிய செல்வந்த நாடானாலும் தப்பிக்க முடியாது. அமெரிக்கா அதன் கொடுங்கோன்மை யை அனுபவித்தது. இந்தியாவில் ஆட்சி யாளர்கள் மக்களைப்பற்றி சிந்தனையற்றவர்கள் என்பதை கொரோனா ஊரடங்கு உணர்த்தியது

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க இந்தியா முழுவதும் சிஐடியு தொழிலாளர்கள் மக்களிடம் சென்று கோடிக்கணக்கில் வசூலித்து மக்களை பாதுகாத்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுவீடாக சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள். கர்நாடகத்தில் அரசாங்கம் அளித்த நிவாரண உதவிகளை, மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு தொழிலாளி வர்க்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொழிற்சங்க இயக்கம் மக்களை பாதுகாக்கும் என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிரூபித்துள்ளது. மக்களோடு நிற்பவன் தொழிலாளி. தொழிற்சங்கம் என்பது தொழிலாளிகளுக்கானது மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமானது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துள்ளோம். தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களுக்கு தொழிலாளிகள் உதவினார்கள். விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியான உறுதியான போராட்டம் நடத்தியபோது அதை ஒடுக்க முயன்று கேலி பேசியவர்கள் கேலிக்கு உள்ளானார்கள். விவசாய சட்டத்தை வாபஸ் பெற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.

போராடும் தொழிலாளர்களுக்கு படிப்பினை யாக அந்த போராட்டம் அமைந்தது. நான்கு தொகுப்புகளாக தொழிலாளர் சட்டத்தை மாற்றியுள்ளதற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்கு விவசாயிகளின் மாபெரும் போராட்டம் ஊக்கமளித்துள்ளது. 1970 க்கு முன்பு தொழிற்சங்க நடவடிக்கையை  முதலாளிகள் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை மீண்டும் தற்போது ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிமெண்ட் ஆலை தொழிலாளி மினிஷ் குப்தா  என்கிற 32 வயது இளைஞன் தொழிற்சங்கம் அமைத்ததற்காக கொல்லப்பட்டார். நேர்மையான ஒரு காவல் கண்காணிப்பாளர் இருந்ததால் குற்றவாளிகள் மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில், அந்த கொலையை செய்த நபருடன் அந்த நிறுவனத்தின் எச்ஆர் மேலாளர் மற்றும் அவரது கைப்பாவை தொழிற்சங்க நிர்வாகிகளும் உள்ளனர்.

1998 வாக்கில் தொழிலுறவு சட்டம் என்ற பெயரில் தொழிலாளிகளின் கழுத்தை நெரிக்கும் சட்டத்தை கொண்டுவந்தார்கள். அதற்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி தொழிலாளர்கள் முறியடித்தார்கள். போராடுகிற அனைவரையும் ஒன்றுபடுத்தி, எதிர்க்க வேண்டியவர்களை எதிர்த்து மதம், சாதி என்கிற பிரிவினைக்கு இடமளிக்காமல் முன்னேற வேண்டும்.ஒட்டுமொத்த தொழிலாளர்களை ஒன்றுபடுத்த வேண்டும். இன்று வகுப்புவாத சக்திகள் பன்னாட்டு உள்நாட்டு மூலதனத்துடன் சேர்ந்து நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.