tamilnadu

‘டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை கைவிடுக!’

திருச்சிராப்பள்ளி, ஜூன்,9- சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட 2வது மாநாடு துவாக்குடி யில் ஞாயிறு அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை பெல் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பிரபு ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணை செயலாளர் அருணன் வாசித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் திருவேட்டை துவக்கவுரையாற்றினார். செயலாளர் அறிக்கையை மாவட்ட செயலாளர் சிவராஜ் வாசித்தார். வரவு- செலவு அறிக்கையை மாவட்ட பொருளா ளர் சம்பத் தாக்கல் செய்தார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம், விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகி சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் பெல் பகுதியில் பணியாற்றும் சொசைட்டி தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கான்ட்ராக்ட் தொழி லாளர்களுக்கு சட்டக்கூலி, இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம், போனஸ் போன்றவற்றை பெல் நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும். தமிழக டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீர்மானங்களை பெல் சிஐடியு சங்க செயலாளர் பரம சிவம் முன்மொழிந்தார். சிஐடியு மாநில துணை பொதுச்செய லாளர் திருச்செல்வம் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பூமாலை, உள்ளாட்சி மாவட்ட தலைவர் பழனிவேல், ஆட்டோ மாவட்ட தலைவர் நவ மணி, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சண்முகம், தையல் சங்க மாவட்ட செயலாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.