tamilnadu

img

கொரோனா காலத்தில் மூடப்பட்ட என்டிசி ஆலைகளை திறந்திடுக!

திருப்பூர், ஜூலை 27- கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட 2020 மார்ச் மாதம்  மூடப்பட்ட தேசிய பஞ்சாலைக் கழக (என்டிசி) ஆலைகளை ஒன்  றிய அரசு உடனடியாக திறந்து  ஆயிரக்கணக்கான தொழிலாளர்  களுக்கு வேலை வாய்ப்பை  உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் எட் டாவது மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் 8ஆவது மாநில மாநாடு திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் தோழர்கள் பி.முருகேசன், கே. முத்துராஜ் நினைவகத்தில் பஞ் சாலை சங்க மாநிலத் தலைவர் சி. பத்மநாபன் தலைமையில் நடை பெற்றது.  முன்னதாக தேவாங்கபுரம் பள்ளி முன்பிருந்து மாநாட்டுக் கொடியுடன் ஊர்வலமாக அவி நாசி சாலை தியாகி பழனிசாமி  நிலையத்துக்கு வந்தனர். கே. பிரபாகரன் குழுவினர் கொண்டு வந்த கே.முத்துராஜ் நினைவுக் கொடியை மாநில உதவித் தலை வர் ஜி.கணேசன் பெற்றுக் கொண்  டார். ஆஷர் மில் தியாகி பழனிச் சாமி நினைவு ஜோதியை பி.ஆர். கணேசனிடம் இருந்து மாநில உத வித் தலைவர் எஸ்.வெங்கடசுப்பிர மணியன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை கலைக்குழுவினர் தப் பாட்டம், அதிர்வேட்டுகள் முழங்க  உற்சாகமாக மாநாட்டு நிகழ்ச்சி தொடங்கியது.

மாநாட்டுக் கொடியை திருப்  பூர் மாவட்ட பஞ்சாலை சங்க முன்  னாள் நிர்வாகி வி.பி.சுப்பிரமணி யம் ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழுத் தலைவர் சி.மூர்த்தி வர வேற்றார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் மாநாட்  டைத் தொடக்கி வைத்து உரை யாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் எம்.அசோகன் வேலையறிக்கை யையும், பொருளாளர் எஸ்.சக்தி வேல் வரவு செலவு அறிக்கையும் முன்வைத்தனர். இதனைத்தொட ர்ந்து அறிக்கையின் மீது பிரதிநிதி கள் விவாதம் நடத்தினர். 

தீர்மானங்கள்

இதில், பஞ்சாலைகளில் பயிற்சியாளர்களின் குறைந்த பட்ச தினசரி கூலியை ரூ.493-ஐ  தமிழக அரசு அமலாக்க வேண் டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளர்களுக்கு ரூ. 493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும், மாநிலம் முழுவதும் இ.எஸ்.ஐ., மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அம லாக்க வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்ட தொழிலாளர் துணை ஆணையாளர் அலுவலகம் மயி லாடுதுறைக்கு மாற்றப்பட்டுள் ளது. இதனால் அந்த மாவட்ட  தொழிலாளர்கள் பாதிப்படைந் துள்ளனர். எனவே இராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் துணை ஆணையாளர் அலுவல கம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏப்ரல் மாதம் பேசி  முடிவு செய்யப்பட்ட கூட்டுறவு பஞ்  சாலைகளின் ஊதிய உயர்வு ஒப்  பந்தம் ஆகி அமலாக்கப்படா மல் உள்ளது. தமிழக அரசு அமைச் சர் முன்னிலையில் ஏற்றுக் கொள்  ளப்பட்ட ஒப்பந்தத்தை உடனடி யாக அமலாக்க வேண்டும். 2020 மார்ச் மாதம் அறிவிக்  கப்பட்ட ஊரடங்கு காலத்தில் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்ட தேசிய பஞ்சாலைகள் ஒன்றிய  அரசால் இதுவரை திறக்கப்பட வில்லை. பல்லாயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழந் துள்ளனர். தேசிய பஞ்சாலை களை இயக்கி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கேரள அர சைப் போல வழங்க வேண்டும்,  குறிப்பாக பெண் தொழிலாளர் களுக்கு விசாகா பாலியல் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும், இயற்கை உபாதை காலத்திற்கு மாதம் மூன்று நாட்கள் விடுப்பு  வழங்க வேண்டும், பஞ்சாலை தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த அளவே பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு பாரா  முகமாக உள்ளதைக் கைவிட்டு  உடனடியாக பென்சன் தொகை யை உயர்த்தி வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இம்மாநாட்டில் மாநிலத் தலை வராக எம்.சந்திரன், மாநிலப் பொதுச் செயலாளராக எம்.அசோகன், மாநிலப் பொருளாளராக எஸ்.சக்திவேல் ஆகியோரும், சி.பத்ம நாபன் உள்பட 13 துணை நிர்வா கிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 32 பேர் மாநிலக்குழு வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  இம்மாநாட்டில் சிஐடியு மாநி லச் செயலாளர் கே.ரங்கராஜ், விசைத்தறி தொழிலாளர் சம் மேளன மாநிலத் தலைவர் பி. முத்துசாமி உள்ளிட்டோர் வாழ்த் திப் பேசினர். சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எம்.சந்திரன் நிறைவுரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட சிஐடியு தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்ட வரவேற்புக் குழுவினர் ஏற்பாடு களைச் செய்திருந்தனர். நிறை வாக வரவேற்புக்குழுச் செயலா ளர் சி.ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.