உழைக்கும் வர்க்கத்தின் உரிமையை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் சிஐடியு நடைபயணம் மேற்கொண்டு வருகிறது. கே.ஆறுமுகநயினார் தலைமையில் தருமபுரியில் நடைபயணத்தில் ஈடுபட்டிருக்கும் குழுவினரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்ட செயலாளர் ஏ.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். (வலது) உழைக்கும் வர்க்கத்தின் விளைநிலமான கீழவெண்மணியில் கே.திருச்செல்வன் தலைமையிலான சிஐடியு நடைபயண பிரச்சார குழுவினர் வெண்மணி வீர தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர்.