சென்னை, பிப்.12- தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின்(சிஐடியு) மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிப்ரவரி 12 அன்று திரு வண்ணாமலையில் மாநில தலைவர் வி.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், சிஐ டியு ஆட்டோ சம்மேளன மாநிலப் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி உள் ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அபராதம் என்கிற முறையில் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதிக்கும் முறை கடந்த காலத்தில் இருந்தது. தற்போது வாகனங்களை பார்த்தாலே ஒரு நம்பரை குறித்துக் கொண்டு சென்று காவல் நிலையத்தில் வைத்து அபராதம் விதிக்கும் முறை அதிகரித்திருக்கிறது.
தமிழகம் முழு வதும் மாதத்திற்கு பல லட்சம் ரூபாய் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப் பது மூலமாக பறிமுதல் செய்யப்படு கிறது. இச்செயலை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கண்டிப்பதோடு, இந்த முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கடந்த காலத்தில் இருந்த முறையை தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்துவதோடு ஆன்-லைன் பதிவு முறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். சாதி சான் றிதழ் கேட்பது, ஆதார் எண் ஓடிபி கேட்பது கைவிடப்பட வேண்டும் நேரடியாக ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்திற்க்கு வந்துபதிவு செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் என்கிற பெயரில் ஆட்டோ தொழிலையே கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஒப்படைக்கிற சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 28-29 நடைபெறக் கூடிய அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளி கள் திரளாக பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.