புதுச்சேரி,ஜூலை 5- காரைக்காலில் காலரா பரவல் சூழலுக்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் எனவும், புதுச்சேரி முதல்வர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி யுள்ளார். காரைக்காலில் ஏராளமானோர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு காலரா பரவல் சூழல் உருவாகியுள்ள நிலையில், பொது சுகாதார அவசர நிலை பிர கடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மக்க ளவை உறுப்பினர் வைத்திய லிங்கம், புதுச்சேரி மாநில காங்கி ரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகி யோர் (ஜூலை 5) காரைக்காலுக்கு வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று அங்கு வயிற்றுப் போக்கால் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறி, பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “காரைக் கால் மாவட்டத்தில் பொது மக்களுக்கு விநியோகிக்கக் கூடிய குடிநீர் அவ்வப்போது உரிய முறைப்படி சுத்திகரிக்கப் படவில்லை. காரைக்கால் மேடு மீனவக் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வயிற்றுப் போக்கால் பலர் பாதிக்கப்பட்ட போது, குடிநீரில் கழிவு நீர் கலந்ததே பாதிப்புக்கு காரணம் என கண்ட றியப்பட்டது. ஆனாலும் அதன் பின்னரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை” என்றார். 1600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உணவு பாதுகாப்பு அதிகாரி பணி யிடம் காலியாக உள்ளதும் இப்பிரச்சினைக்கு ஒரு காரணம் என்றும் கூறினார்.