tamilnadu

img

சீனாவின் டார்க் தொழிற்சாலைகளும் பிக்-அப் ஆகாத மேக் இன் இந்தியாவும் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி (

சீனாவின் டார்க் தொழிற்சாலைகளும் பிக்-அப் ஆகாத மேக் இன் இந்தியாவும்

பல பத்தாண்டுகளாகவே வெளி நாட்டுக்கு அனுப்பப்பட்ட தனது உற்பத்தித் துறையையும் அதனுடன் தொடர்புடைய வேலைகளையும் அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டு வரவும், அதன் மூலம் சீனாவைத் தனிமைப் படுத்தவும் டிரம்ப் நிர்வாகம் முழுமையான வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் டிரம்ப்பின் வரி விதிப்புகள் பற்றிய செய்தி உலகை ஆக்கிரமித்திருக்கும் போது, சீனா அமைதியாக தனது உற்பத்தித் துறையை யும் பொருளாதாரத்தையும் மாற்றி யமைக்கும் நீண்டகால பார்வையை செயல்படுத்தி வருகிறது. ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முத லீடுகளைப் பயன்படுத்தி, சீனா தனது உற்பத்தி அடித்தளத்தை மறுவடிவமைக் கிறது - பாரம்பரிய முறைகள் கொண்ட தொழி லாளர் சக்தியை அதிக அளவில் செல வழிக்க வேண்டிய -தீவிர செயல்முறை களில் இருந்து முழுமையாக தானியங்கி,  உயர்-தொழில்நுட்ப “டார்க் தொழிற்சாலை கள்” என்று அழைக்கப்படும் நவீன தொழிற் சாலைகளுக்கு மாறுகிறது. 2015-இல் அறிமுகப்படுத்தப்பட்ட “மேட் இன் சைனா 2025” திட்டத்தின் கீழ், சீன  அரசாங்கம் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பத்து முன்னேறிய துறைகளை பெரிய அளவிலான ஆராய்ச்சி & மேம்பாட்டு நிதி மற்றும் அரசு வங்கி கடனுக்கான எளிதான அணுகலுக்காக இலக்கு நிர்ணயித்துள்ளது. 2023-இல் மட்டும் 140 கோடி பில்லியன் டாலர்க்கும் அதிகமான தொகை உள்நாட்டு ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சிக்கு பாய்ந்தது. இதன் விளைவாக, சீனா உலகின் மிகப் பெரிய தொழிற்சாலை ரோபாட்களின் நுகர்வோராக மாறியுள்ளது, தற்போது ஒவ்வொரு 10,000 தொழிலாளர்களுக்கும் 392 ரோபாட் என்ற அளவில் தொழில்நுட்பம் அடர்த்தியைக் கொண்டுள்ளது - இது உலக சராசரியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.  “டார்க் தொழிற்சாலைகள்” சீனாவின் தானியங்கி இயக்கத்தின் மிகவும் கவர்ச்சிகரமான வெளிப்பாடு “டார்க் தொழிற்சாலைகள்” அல்லது “லைட்ஸ்-அவுட் தொழிற்சாலைகள்” என்ற புதிய வகை தொழிற்சாலைகள் ஆகும். இந்த வசதிகள் மனித தலையீடு இல்லாமல் முற்றிலும் இயங்குகின்றன, செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ் மற்றும் மேம்பட்ட உணரிகளால் இயக்கப்படுகின்றன. ஒளி, வெப்பம் மற்றும் ஓய்வு அறைகள் போன்ற மனித ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புக்கான தேவையை இவை நீக்குவதால், நாள் முழுவதும் (24/7) இயங்க முடியும்; இவை உற்பத்தி திறனை கணிச மாக அதிகரிக்கின்றன. தரக் கட்டுப்பாட்டை யும் மேம்படுத்துகின்றன, சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மனித திறன்களை விஞ்சும் துல்லியத்தை அடைகின்றன. எடுத்துக்காட்டாக, ஷியாமியின் (xiomi) ஸ்மார்ட் தொழிற்சாலை சாங்பிங் நகரில் மனித தொழிலாளர்கள் இல்லாமல் ஒவ் வொரு 3 வினாடிகளுக்கும் ஒரு ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல், நிங்போ வில் உள்ள ஜீக்கர் மின்சார கார் தொழிற் சாலையின் பகுதிகள் “டார்க் தொழிற்சாலை கள்” எனும் கூடங்களில் தயாராகின்றன; அங்கு நூற்றுக்கணக்கான ரோபாட்கள் சிக்கலான வெல்டிங் பணிகளை தானாகவே செய்கின்றன.  இந்தியாவின் அணுகுமுறை சீனாவின் இந்த அணுகுமுறையுடன் இந்தியாவின் “ஆத்மநிர்பர் பாரத்” மற்றும்  “மேக் இன் இந்தியா” போன்ற முன்முயற்சி களின் சுயசார்பு உணர்வை ஒப்பிடுகை யில், மோடி அரசு இந்தியாவில் மேம்பட்ட செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க 1000 கோடி டாலர் ஊக்கத்தொகை திட்டங்களை அறிவித்திருந்தாலும், இது குறித்து பெரிய முன்னேற்றம் ஏதும்இல்லை. மோடி அரசுக்கு, மலிவான உழைப்பை அணுகுவதன் மூலம் உற்பத்தி இந்தியாவில் நடைபெறுவது மட்டுமே முக்கியம். சுயசார்பு என்பது இறுதி உற்பத்தி உள்ளூரில் நடைபெறுவது மட்டுமல்ல, உற்பத்திக்குத் தேவையான அறிவும் உபகரணங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதையும் குறிக்கும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்களும் அறிவுமே முக்கியம் என்பதை மோடி அரசு அங்கீகரிக்கவில்லை. இந்தியாவிற்கான பாடங்கள் இந்தியா சீனாவின் அதிவேகப் பாய்ச்ச லிலிருந்து முக்கியமான பாடங்களைப் பெறலாம். சீனாவின் வெற்றி பெரும் அரசாங்க முதலீடு மற்றும் தொழில்நுட்ப சுயசார்புக் கான தெளிவான நோக்கங்களுடன் ஆதரிக்கப்பட்ட ஒரு நீடித்த, பல ஆண்டு தேசிய நீண்டகால இலக்குத் திட்டம் என்று தோன்றுகிறது.  இது வெறுமனே மலிவான உழைப்புக் காக வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதை நம்பவில்லை; இது தனது சொந்த தொழில் தளத்தை உருவாக்குவதில் கவனம்  செலுத்தியது, உள்நாட்டு அறிவு, உபகரணங்கள் மற்றும் முக்கிய கூறுகளை உருவாக்கியது. இந்தியா உண்மையில் சுயசார்பை அடைந்து புதிய தொழிலாளர் பொருளாதா ரத்தில் போட்டியிட, வெறுமனே அசெம்பிள் செயல்பாடுகளை ஈர்ப்பதை தாண்டிச் செல்ல வேண்டும். தேவையான திறமையான பணியாளர்கள் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப அறிவை உருவாக்க பொது கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முதலீட்டை கணிசமாக அதிகரிக்க வேண்டும். ரோபாட்டிக்ஸ் கூறுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பொருட்கள் போன்ற முக்கிய பகுதிகளில் உள்நாட்டு திறன்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது அவசியம்.  பீப்பிள்ஸ் டெமாக்ரசி (மே 11) தொழில்நுட்ப வல்லுநர் பப்பா சின்ஹா எழுதிய கட்டுரையின் சாராம்சம்