குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்
திருவாரூர், செப். 11- தமிழ்நாடு அறிவியல் திருவாரூர் மாவட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறக் கூடிய 34 ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம், திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு திருவாரூர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ். சுரேஷ் தலைமை ஏற்றார், திருவாரூர் வட்டாரக் கல்வி அலுவலர் கே. சுமதி, மாவட்டத் தலைவர் பி.சங்கரலிங்கம், மாவட்டத் துணைத் தலைவர்கள் எம்.ராணி, எஸ்.தேவிகா, ஆர்.கே. சரவணராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை’’ என்ற தலைப்பில் கருத்தாளர்களாக மாநிலச் செயலாளர் எம்.எஸ். ஸ்டீபன் நாதன், குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.விஜயன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் க.அன்பழகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் ப.குமார், திருவாரூர் ஒன்றியச் செயலாளர் மீனா.சாமிநாதன், ஒன்றிய பொருளாளர் மீனா.மேகநாதன் மற்றும் திருவாரூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
