tamilnadu

img

ஏரி தூர்வாரும் பணி: தலைமைச் செயலாளர் ஆய்வு

மதுராந்தம்,டிச.19- செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. ஏரியின் மொத்த உயரமான 23.3 அடியில் 10 அடிக்கு மேல் மண் தூர்ந்துள்ளதா ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு பின்னர் ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டினாலும் அடியில் மண் சேர்ந்தி ருப்பதால் மழைநீரை கூடுதலாக சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏரி நிரம்பி வீணாக உபரிநீர் கடலில் சென்று கலந்துவந்தது. இதையடுத்து மதுராந்தகம் ஏரியை தூர் வார வேண்டும் என்று மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ.120.24 கோடி ஒதுக்கியது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது. ஏரியை ஆழப்படுத்தி தூர்வாரு தல், கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், மதகுகள் மற்றும் பாசன கால்வாயை சீர மைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஏரி தூர்வாரும் பணியை அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார். தூர்வாரும் பணிகள் எத்தனை விழுக்காடு முடிந் துள்ளது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகள் அதிகமுள்ள இடங்களை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நீர்வள ஆதாரத் துறை செயலாளர் சந்திப் சக்சேனா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் மற்றும் வருவாய்த் துறை, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.