சென்னை, ஜூன் 21- காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு பணத்தை உடனடி யாக வழங்க வேண்டும் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.அரிசங்கர் ஆகி யோர் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச் சர் தங்கம் தென்னரசை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் கலைஞர், ஒன்றிய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது, அதன் அடிப்படையி லேயே நிலுவைத் தொகை யோடு மாநில அரசு ஊழியர் களுக்கும் வழங்கும் நடை முறையினை கொண்டு வந்தார். அதே நடைமுறையினை 1.7.2023 முதல் ஒன் றிய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்கு டன் மாநில அரசும் அறிவிக்கும் என்ற தமிழ்நாடு முதலமைச்ச ரின் கொள்கை முடிவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதைப் போலவே, கலைஞரால் கொண்டு வரப் பட்ட, ஈட்டிய விடுப்புக் கணக்கி லுள்ள விடுப்பை சரண் செய்து ஊதியமாகப் பெறும் நடை முறையானது, கொரோனா பெருந்தொற்றை காரணம் பாட்டி, கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாததோடு மட்டு மல்லாமல், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டு அர சாணை வெளியிடப்பட்டுள் ளது. தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஆசிரி யர்கள்-அரசு ஊழியர்கள் சரண் விடுப்பை ஒப்படைத்து ஊதியமாகப் பெற்று, அதன் மூலமாக தங்கள் குழந்தை களின் கல்விக் கட்டணம் செலுத்துவது என்பது பல் லாண்டுகளாக இருந்து வந்தது. ஆனால், தற்போது காலவரை யின்றி சரண் விடுப்பு ஒப்ப டைப்பு என்பது முடக்கி வைக் கப்பட்டுள்ளதால், கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். எனவே காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு முடக்கத்தை முதலமைச்சர் ரத்து செய்து, மீண்டும் சரண் விடுப்பை பணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.