tamilnadu

img

புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை பணிகள் முடங்கும் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதியை வெட்டியது ஏமாற்றம்!

சென்னை, ஆக. 19 - “தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது” என்றும் “தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்” என்று ஒன்றிய ரயில்வே  துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள் ளார். அந்தக் கடிதத்தில் மேலும் அவர் கூறியிருப்பதாவது: 2024-2025 நிதியாண்டுக்கான இந்திய ரயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவு.  கணக்குத் தலைப்பு 11- புதிய பாதைகள் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக் கிறது. கணக்குத் தலைப்பு 15- இரட்டைப் பாதையாக்கல் என்பதன் கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ. 674.8 கோடி அளவுக்கு அதிரடிக் குறைப்பு  செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நடை பெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும். அந்த வகையில், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழனி, சென்னை -கடலூர் - மகாபலிபுரம்,  மதுரை - தூத்துக்குடி (வழி - அருப்புக் கோட்டை), ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக் கோட்டை - ஆவடி - ஸ்ரீபெரும் புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்கள் பாதிக்க ப்படும். அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64  கோடி ரூபாய் அளவுக்குக் குறைத்திருப்  பது, தமிழகத்தில் மிகவும் அத்தியாவசிய மாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப் படுத்தும். அந்த வகையில், விழுப்புரம் - திண்டுக்கல், திருவள்ளூர் - அரக்கோணம் (4-வது லேன்), ஓமலூர் - மேட்டூர் அணை, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி, மதுரை -மணியாச்சி - தூத்துக்குடி, மணியாச்சி - நாகர்கோவில், சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர், காட்பாடி - விழுப்புரம், சேலம் - கரூர் -திண்டுக்கல், ஈரோடு - கரூர்,  சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர், அரக்கோணம் யார்டு சாலை 1 மற்றும் 2-க்கு,3 வது மற்றும் 4 வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். மேலும், தெற்கு ரயில்வேயில் நிலுவையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சாரப் பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.