tamilnadu

img

பாஜக வென்றால் தமிழ்நாடே இல்லாமல் போய்விடும்

திருவாரூர், ஜூன் 21- பாஜக மீண்டும் வென்றால் தமிழ்நாடு என்ற  மாநிலமே இல்லாமல் போய்விடும் என்று எச்ச ரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திருவாரூரில் செவ்வாயன்று நடைபெற்ற கலைஞர் கோட்டத் திறப்பு விழாவில் அவர் பேசியதாவது: இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கக்  கூடிய பொறுப்பை ஏற்று அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பீகார் தொடங்கியிருக்கி றது. ஜூன் 23 அன்று பீகார் மாநிலம், பாட்னா வில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்  கிணைப்புக் கூட்டம் நடக்க இருக்கிறது. பாட்னா  என்பது இந்தியாவின் தொன்மையான நக ரங்களில் ஒன்றாகும். பாடலிபுத்திரம் என்று வர லாற்றில் அழைக்கப்படக்கூடிய நகரம்தான் இன்றைய பாட்னா. அறிவு மற்றும் ஞானத்தின்  அடையாளமாக சொல்லப்பட்ட நகரம் அது. ஜனநாயகம் என்பது வீட்டு விளக்கு; சர்வாதி காரம் என்பது காட்டுத் தீ என்று சொன்னவர் கலை ஞர். பாஜக கடந்த பத்தாண்டு காலமாகப் பரப்பி  வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது.  அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னா வில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை நிதீஷ்குமார் தொடங்கி வைக்க இருக்கிறார். நானும் பாட்னா செல்கிறேன். இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய  நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம்  இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் மூவா யிரம் நான்காயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லா மல் போய்விடும். மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழ்நாட்டுக்கும், இந்தி யாவுக்கும் இந்தியாவின் எதிர்க்காலத்திற்கு அது கேடாக முடியும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறமோ, வெற்றி பெறுகிறமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண் டும். வெற்றி வேண்டும். அந்த வெற்றிக்கு முன்னாள் ஒற்றுமை வேண்டும். அதனுடைய முன்னோட்டமாகத்தான் பீகார் மாநிலத்தில் உள்ள கூட்டம் அமையவிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.