tamilnadu

img

மோடியிடம் சரணாகதி அடைந்து வெற்றுப் பலகையாக நிற்கும் அதிமுக

திருப்பூர், பிப்.13- எம்ஜிஆர்., ஜெயலலிதாவை மறந்து மோடி எங்கள் டாடி என்று சொல்லி இன்று வெற்றுப் பலகையாக அதிமுக இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார். திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் 8 வேட்பா ளர்கள் உட்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை மாலை காணொலி வாயிலாக உரையாற்றிய மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது: திருப்பூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதை மேம்படுத்தும் திட்டமாக திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கித் தந்தவர் கலைஞர். மேலும் கடந்த நவம்பர் மாதம் 4149 பயனாளிகளுக்கு ரூ.54 கோடியே 32 லட்சத்து 51 ஆயிரத்து 232 ரூபாய்க்கு நிதி உதவி திட்டம் வழங்கப்பட்டது.

660 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 கோடி கடனுதவி வழங்கப்பட்டதுடன், ஏராளமான கட்டி டங்களும் திறந்து வைக்கப்பட்டன. எட்டு மாதத்தில் செய்திருக்கும் திட்டப் பணிகள் இவை.  மார்ச் மாதம் புதிய நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும்போது மானியக் கோரிக்கையில் திருப்பூர் மட்டு மின்றி மற்ற பகுதிகளுக்கும் ஏராளமான புதிய, புதிய திட்டங்கள் கொடுப்பதற்கு இப்போதே பணிகளைத் தொடங்கி விட்டோம். போராட்டத்தின் மூலம் ஒன்றிய அரசை அடிபணிய வைத்தனர். உழவர்கள் நடத்தியது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். ஜிஎஸ்டி வரி கொள்கை மூலம் மாநில அரசின் நிதியாதாரத்தை நிர்க்கதியான நிலைக்கு தள்ளி விட்டது ஒன்றிய அரசு. நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பறித்தது ஒன்றிய அரசு.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு  வருவதற்கு முன்பே நீட் தேர்வை கொண்டு  வந்தது பாஜக அரசு. ஆனால் ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வில், பழனிசாமி, பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனி, மாநில பாடத்திட்டத் தில் தரம் குறைவாக இருப்பதாகவும், தரம் உயரும் வரை விலக்கு கேட்டிருப்பதாகவும் கூறினர். இதன் மூலம் இந்த பாடத்திட்டத்தில் படித்து முன்னேறியவர்களை கொச்சைப்படுத்தினர். எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டு மோடி  எங்கள் டாடி என்று சரணாகதி அடைந்துவிட்டனர். இவர்கள் செய்வதைப் பார்த்தால், இங்கு நல்ல மீன் கிடைக்கும் என்று எழுதப்பட்ட பலகையை வைத்து நடிகர்கள் பார்த்திபன், வடிவேலு செய்யும் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது. அந்த படத்தில், ஒவ்வொரு வார்த்தையாக அழித்து கடைசியில் வெறும் பலகைதான் இருக்கும். அதுபோல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவை மறந்து திராவிடத்தையும், முன்னேற்றத்தையும் இழந்து கழகத்தை அடகு வைத்து இன்று வெற்றுப் பலகையாக நிற்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கையில் பல ஆபத்து கள் இருக்கின்றன. அவற்றையும் நாங்கள் கடுமை யாக எதிர்க்கிறோம். ஒரே நாடு ஒரே பத்திரப் பதிவு என்று இந்த நாட்டை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஆனால் அகில இந்தியா முழுவதும் மாநில சுயாட்சி தத்துவத்தை மலர வைப்போம்.

சிறுதொழில்களை அழித்த பாஜக

வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் மையமாக உள்ளது. ஆனால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை. திமுக  அரசு இந்த தொழில் துறையைப் பாதுகாக்க பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு நிதி நிலை அறிக்கையில் சிறு, குறு தொழில் துறையினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி  செய்யவில்லை. குஜராத் வைர வியாபாரி களுக்கு 5 சதவிகிதம் வரி குறைப்பு, ஆனால் திருப்பூர் தொழில் துறையினருக்கு எதுவும் இல்லை  என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு தவறுக்கு மேல் தவறு செய்து சிறு குறு தொழில் துறையை அதள பாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. அவர்களின் தவறான கொள்கைதான் இதற்கு காரணம். ஜிஎஸ்டி வரி அடிப்படையில் மொத்த வர்த்தகத்தில் 24 சதவிகிதம் குறைந்துவிட்டது. ஏற்றுமதி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கச்சா பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பலரும் சிறு, குறு நிறுவனங்களை மூடிவிட்டனர்.  திமுக அரசு சிறு, குறு தொழில்கள் முன்னேற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திமுக அரசு கொண்டு வந்த மகளிருக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தால் 40 சதவிகிதமாக இருந்த பெண் பயணிகள் போக்குவரத்து தற்போது 61 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கொரோனா காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி உதவி, உங்கள் தொகுதியில் முதல்வர், நகர்ப்புற  ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு திட்டம் என பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். எனவே தமிழக மக்கள் வாழ்க்கை மேன்மை அடைய உங்கள் ஆதரவைத் தொடர்ந்து தர வேண்டும். மக்களிடம் செல், மக்களுடன் வாழ்  என்ற அண்ணாவின் சொல்லுக்கு ஏற்ப செயல் பட்டு மக்களின் நம்பிக்கையை எந்நாளும் காப்போம்.  

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி னார். காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத் தில் மாநில அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல் விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், சண்முக சுந்தரம் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உரையாற்றினர். நிறைவாக திமுக தெற்கு மாநகரப் பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராஜன் நன்றி கூறினார்.