tamilnadu

img

ரூ.3500 கோடிக்கு முதலீடு: 5000 பேருக்கு வேலை

சென்னை,மார்ச் 28- அரசு முறைப் பயணமாக துபாய் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரி களுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து சந்திப்பு மற்றும் அரபு நிறுவனம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும்  3500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்ப டுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தி லும், துபாய் மற்றும் அபுதாபிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அதன்படி, துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, அபுதாபிக்கு வந்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய  அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்க ளின் உயர் தலைமை நிர்வாக அதிகாரி களை சந்தித்தார்.

அப்போது, ஐக்கிய அரபு நாடு களைச் சேர்ந்த அபுதாபியிலுள்ள முபா தாலா கோபுரம் எமிரேட்ஸ் பேலஸில்  முன்னணி நிறுவனங்களின் தலைமை  நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்தார்.  இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சையத் அரார் சந்திப்பின் போது,  தமிழ்நாட்டில், மிகப் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு இந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.  ஏற்கெனவே, முபாதாலா  நிறுவனம், பிரின்ஸ்டன் டிஜிட்டல்  என்ற நிறுவனத்தின் பெயரில் 350 மில்லியன் டாலர் முதலீடுகள்  மேற்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. மேலும், முபாதாலா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் நிறுவ னங்களுக்கிடையே ஒரு பணிக் குழுவை அமைத்து, தமிழ்நாட்டில் உள்ள பசுமை எரிசக்தி, சாலை திட்டங்கள், தொழிற் பூங்காக்கள் மற்றும் உடனடியாக துவங்கும் திட்டங்கள், தொழிற்சாலைகளில் பணி புரியும் பணியாளர்களுக்கான விடுதி கள்  மற்றும் தகவல் தரவு மையங்கள்  போன்ற மிகப் பெரிய உள்கட்ட மைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கவும் முபாதாலா நிறுவ னத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அபுதாபி வர்த்தக சபை தலை வரும், ஐக்கிய அரபு நாடுகளின் வர்த்தக சபை மற்றும் அரபு வர்த்தகக் கூட்டமைப்பு தலைவருமான அப்துல்லா முகமது அல்லுடனான சந்திப்பின்போது, அபுதாபி நிறுவனங்கள் தமிழகத்தில்  உணவு  பதப்படுத்துதல், உணவுப் பூங்காக் கள், குளிர்பதனக் கிடங்குகள், சரக்கு மற்றும் சேவைகள், வணி கத்தீர்வை திட்டங்கள் போன்ற வற்றில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருட்களை ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு/வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.   ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு மேற்கொள்ள ஆர்வமுள்ள நிறு வனங்கள், குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள், தடையில்லா வர்த்தக  மண்டலங்கள், கிடங்குகள் மற்றும்  சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்க ளில் முதலீடு செய்திடலாம் என்றும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஓசூர் போன்ற நகரங்களில் தொழில், சேவை மற்றும் சில்லரை வணிகங்கள் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு இவ்வா றான உள்கட்டமைப்புத் தேவைகள் அதிகம் உள்ளது என்றும், எனவே, இத்துறைகளில் முதலீடுகள் மேற் கொள்ளுமாறும், அபுதாபி நிறுவ னங்களுக்கு அழைப்பு விடுத்தார்.  

இந்த சந்திப்பின்போது,தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  லுலு நிறுவனம், 3500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 3 திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.  அதில், 2,500 கோடி ரூபாய்  முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1,000 கோடி ரூபாய் முதலீடுக ளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் நிறுவிட லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வுகளின்போது தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை  செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.