tamilnadu

img

தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களை தடுக்க வேண்டும்

சென்னை, அக். 3- அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று  திட்டமிடுபவர்களுக்கு இடமளித் துவிடக் கூடாது. என முதலமைச்சசர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினரை கேட்டு கொண்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செவ்வாயன்று (அக். 3) தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் மாநாடு நடை பெற்றது. இதில் முதலமைச்சர் பேசுகை யில், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கிறோம். இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு உங்களது ஆலோசனைகளை, எந்தவித தயக்கமுமின்றி, மக்கள் நலன் ஒன்றையே மையமாகக் கொண்டு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத் திக் காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது, பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களை முழு மையாகத் தடுப்பது. அமைதி யான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்ட மிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. போதைப்பொருட்கள் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற இருப்பதால் அந்த உள் நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். இது நம் எதிர் காலத் தலைமுறையையே சீரழிக்கி றது. இது சம்பந்தமான குற்றவாளி களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார்.

சாலை விபத்து

சாலை விபத்துகளால் மிக அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகி யவை ஒருங்கிணைந்து திட்டங் களை வகுத்து, விபத்துகளைக் குறை ப்பது குறித்து ஆய்வு செய்யும் முயற்சியில் முழுமையாக ஈடுபட  வேண்டும். சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல். அதனைக் குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப் பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக்  கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும். பட்டியலின – பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அந்த மக்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அச்ச மின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

பாராட்டு\

சமீப காலத்தில், தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மற்றும் திருச்சி மாவட்டம், நவல் பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆகி யோரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது. தற்போதைய காலகட்டத்தில், உண்மைக்குப் புறம்பான செய்தி களை பரப்புவதில் சமூக ஊடகங் களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் களும், காவல் கண்காணிப் பாளர்களும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணித்து, பொய்ச் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, அதற்குரிய உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.  தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களை சிறப்பிக் கும் வகையில் 2022ஆம் ஆண்டுக் கான பசுமை விருதுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தேனி மாவட்ட ஆட்சியர்  ஆர்.வி.சஜீ வனா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி யர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பித்தார். இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மது விலக்கு மற்றும் ஆய்த்தீர்வை துறை முதன்மை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.