tamilnadu

img

சுயமரியாதை, சமதர்ம அரசியலை உயர்த்திப் பிடிப்போம்!

சென்னை,டிச.25- சுயமரியாதை, சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய ‘கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு’ நூலின் தமிழ்ப் பதிப்பு மற்றும் மாநில  திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய ‘திராவிட மும் சமூக மாற்றமும்’ நூலின் தமிழ்ப் பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. இரண்டு நூல்களையும் முதல்வர் வெளியிட்ட, முதல் பிரதிகளை அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ‘இந்து’ என்.ராம், நூல்களின் ஆசிரி யர்கள் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ஜெ. ஜெயரஞ்சன், அமைச்சர் மா.சுப்பிர மணியன், மக்களவை உறுப்பினர் கனி மொழி, முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, வஉசி நூலக நிறுவ னர் கவிஞர் இளையபாரதி, மாநில திட்டக்குழு முழு நேர உறுப்பினர் ராம. சீனிவாசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சி யில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டா லின் பேசுகையில், “கருணாநிதி வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் அவர்மீதான விமர்சன பார்வையுடன் ‘கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு’ நூல் அமைந்திருக்கிறது. குறிப்பாக, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதியின் நிலைப்பாடு விரி வாக எழுதப்பட்டுள்ளது”என்றார். சுயமரியாதை, சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம். தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்திலும், ஆங்கில புத்தகங்களை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண் டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.