tamilnadu

img

நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்

சென்னை, ஜூலை 19-  தமிழ்நாட்டில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கும் வகையில் இறக்குமதி வரி  நீக்கம் உள்ளிட்ட நடவடிக் கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பருத்தி விலை உயர்வு, செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பு, தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்ற  காரணங்களால் தமிழ் நாட்டில் கடந்த 15 ஆம் தேதி  முதல் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் அறிவித்திருப்பதை முதல மைச்சர் சுட்டிக்காட்டி யுள்ளார்.  இதே பிரச்சனை தொடர் பாக கடந்த மே மாதம் 16  ஆம் தேதி கடிதம் எழுதிய தையும் குறிப்பிட்டுக் காட்டி யுள்ள முதலமைச்சர் 15 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நூற்பு முதல் துணிகள் வரையிலான ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

நூற்பாலைத் துறைக்கு உதவும் வகையில் அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், உரிய நிதி உதவியை வழங்கவும், அந்நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத் தும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கவும் வேண்டும் என்றும் முதல மைச்சர் கூறியுள்ளார். ஏற்கெனவே பெற்ற கடனை ஆறு ஆண்டு கால  கடனாக மாற்றி திருத்தி  அமைக்கவும், இத்திட்டத் தின் கீழ் புதிய கடன்கள் வழங்கிடவும், இ கடன்களுக் கான வங்கி வட்டி விகிதங் களை குறைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியை திரும்பப் பெற வேண்டும் என்றும், அதன் மூலம் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து கழிவுப் பருத்தியை ஏற்றுமதி செய்வ தற்கு தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.