tamilnadu

கொட்டிவாக்கத்தில் புதிய பாலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

கொட்டிவாக்கத்தில் புதிய பாலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, மே 29- சென்னை பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கம், பக்கிங்ஹாம் கால்வாய் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகரில் புதிய பாலம் கட்ட  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி யுள்ளார். பக்கிங்ஹாம் கால்வா யின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் காமராஜர் சாலை. வீரமணி சாலை, பாலவாக்கம் பகுதியில் புதிய பாலம், சோழிங்க நல்லூர் மண்டலம், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்  கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் பாண்டியன் தெரு, அண்ணாநகர், துரைப் பாக்கம் பகுதியில் புதிய பாலம், என 21.03 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலங்கள் கட்டுவதற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டி னார். திருவொற்றியூரில் புதிய வணிக வளாக கட்டிடம்  ராயபுரம் மண்டலம், ஆதித்தனார் சாலை, புதுப்பேட்டை டி-டிப்போ வில் 5.40 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அலுவலகக் கட்டி டம்; திருவொற்றியூர் மண்டலம், பட்டினத்தார் சாலையில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகக் கட்டிடம்.மொத்தம் 59.60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.