சென்னை,ஜூலை 16- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த செய்தியா ளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மருத்து வத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்வர் மிகவும் நன்றாக இருக்கிறார். மருத்துவர்கள் அறிவு றுத்தல்படியே ஓய்வில் இருக்கிறார். முதல்வர் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அறிவிப்பார்கள். தற்போதைய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆவடி நாசருக்கும் அண்மை யில் பாதிப்பு ஏற்பட்டது. தொற்று தற்போது அரசியல் வாதிகளுக்கு மட்டும் வருவதாக கூற முடியாது. பலருக்கும் வேகமாக பரவுகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா அதிக ரித்துள்ளது. பெரிய ளவில் இல்லை என்றா லும்100, 50 என்றளவில் அதிகரிக்கிறது. கொரோனா பதிப்பில் 40 விழுக்காட்டினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே குறிப்பிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும். அந்த சூழல் தற்போது இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.