tamilnadu

img

மதச்சார்பின்மையை பாதுகாக்க இன்றும் தேவைப்படுகிறார் நேரு

சென்னை,டிச.26- கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை,  மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூக நீதியை நிலை நாட்ட காந்தி யும், நேருவும் இப்போதும் தேவைப் படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தக வெளி யீட்டு விழா சென்னையில் ஞாயிறன்று (டிச.25)  நடைபெற்றது. இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் ஒரு சோஷலிஸ்ட் நான் ஒரு குடியரசுவாதி, மன்னர்களையும் இளவரசர்களையும் நம்புவதில்லை. ஒரு வர்க்கத்தின் மீது இன்னொரு வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கத்தை  ஒழிக்க நினைப்பவன் நான்” என்று  பேசியவர் நேரு’’. நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு என்றும் அவர் கூறினார். ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே  மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத் திற்கு அவர் எதிரானவர். வகுப்புவாத மும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதியளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.  தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்து வம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள் என்றும் முதல்வர் கூறினார்.

கசக்கத்தான் செய்யும்

ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசி யலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார். சில நேரம் அவர் நேருவை போன்று பேசு கிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக  தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்து குழுமத்தின் என்.ராம், புதுச்சேரி முன்னாள் முதல்வர் வெ. வைத்திய லிங்கம், குண்டுராவ், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தீக்கதிர் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் ராமலிங்கம், மக்களவை உறுப்பினர்கள் கே.சுப்புராயன் (சிபிஐ), நவாஸ்கான் (ஐயுஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, எழுத்தாளர் பாரதிகிருஷ்ணகுமார், சசிகாந்த் செந்தில் (முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி) உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.