tamilnadu

img

தற்காலிக நிவாரணம் ரூ.7,033 கோடி வேண்டும்

சென்னை,டிச.14- தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த ஒன்றிய அரசின் பல்துறை ஆய்வு குழு, டிச.12 மற்றும் டிச.13 ஆகிய நாட்க ளில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல் பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்க ளில் ஆய்வு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து வியாழ னன்று (டிச.14) தமிழ்நாடு முதல்வரை சென்னை தலைமைச் செயலகத்தில் ஒன்றிய அரசின் பல்துறை ஆய்வு குழுவினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரும் கோரிக்கை மனுவை ஒன்றிய அரசின் ஆய்வுக் குழுவின் தலைவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இக்கோரிக்கை மனுவில், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவ மனைகள் போன்ற பொதுக் கட்ட மைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு களை சரி செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் சேதம டைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட மின்சார உட்கட்டமைப்புகளை சீர் செய்திட வேண்டும்.  பாதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராம சாலைகள் ஆகியவற்றை சீர் செய்திட இழப்பீடு கள் கோரப்பட்டுள்ளது. மேலும், மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகு கள், வலைகள் ஆகியவற்றுக்கு இழப்பீடுகள் வழங்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்ய வேண்டும். சாலையோர வியாபாரிகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான உதவி களை வழங்க வேண்டும். தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ. 7033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ. 12,659 கோடியும் கோரப்பட்டுள்ளது.

முதல்வர் நன்றி

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:  சென்னையில் கடந்த இரண்டு நாட்கள் நீங்கள் மேற்கொண்ட ஆய்வு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வெள்ள சேதத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக ளையும் எடுத்திருந்தது.  அதேபோல் புயல், மழையின் தாக்கத்திற்கு பிறகு, மீட்பு நிவாரண நட வடிக்கைகள் முழு வீச்சில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. புதன்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை குறிப்பிட்டு நீங்கள் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தி ருந்தீர்கள், அதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு காணாத இந்த பெரு மழையின் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய சேதங்களை சரி செய்து மீண்டும் உருவாக்கவும், வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்க ளுக்கு அதை மீண்டும் உருவாக்கி வழங்க வேண்டும்.  தமிழ்நாடு அரசின் நிதி ஆதா ரங்கள் மட்டும் போதுமானது அல்ல. ஒன்றிய அரசின் பங்களிப்பும் இதற்கு பெருமளவில் தேவைப்படுகிறது. எனவே, மிக்ஜம் புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் உள்ள குடும் பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக உட்கட்டமைப்புகளை மீட்டுரு வாக்கம் செய்யவும் ஒன்றிய அரசுக்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து, தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவார ணத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.  இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலா ளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.