இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென்மண்டல அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் சுசித்ரா கே.எல்லா, மண்டல இயக்குநர் என்.எம்.பி ஜெயேஷ், தக்ஷின் அமைப்பின் தலைவர் டி.ஜி.தியாகராஜன், திரைபட இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமௌலி, சுகுமார், திரைக்கலைஞர்கள் ஜெயராம், ஜெயம்ரவி, ரமேஷ் அரவிந்த் உடனிருந்தனர்.
சென்னை, ஏப்.9- இன்றைய தலைமுறையினர் திரைப்படங்களை பார்த்து வளர்வதை மனதில் வைத்துக் கொண்டு, சமூ கத்திற்குப் பயனளிக்கும் முற்போக்கான திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று திரைத்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள்விடுத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் நடை பெற்ற தக்ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் முதல்வர் உரை யாற்றியது வருமாறு:- “திமுகவும் திரைத்துறையும் பிரிக்க முடியாதது. அதைப்போலவே, எங்கள் குடும்பமும் திரையுலகமும் கூட பிரிக்க முடியாததுதான். திரையுலகம் பழைய நிலைமைக்குத் திரும்புவது மட்டுமல்ல, முன்னிலும் வேகமாகச் செயல்படு வதற்காகத் தான் இந்த மாநாடு. அதற்கும் இந்த மாநாடு வழிவகை செய்யும் என்று நம்புகிறேன்.
லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தொழிலை நம்பி தான் இருக்கிறார்கள். பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடை பெறும் தொழிலாகவும் இது அமைந் திருக்கிறது. எனவே இதைப் பொழுது போக்கு என்று மட்டும் சுருக்கிச் சொல்ல முடியாது.
வழிகாட்டிய தமிழகம்
திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். அதிலும் குறிப்பாகச் சென்னை தான். தென்னகத் திரைப்படத் துறை இந்திய சினிமாவிற்கு முன்னோடியை பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக் கிறது. பல்வேறு தொழில்நுட்பங்களிலும், சென்னை இன்றைக்கும் முன்னோடி யாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. இதே போலத்தான் தமிழகச் செய்தி நிறுவனங்களும் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவையாக அமைந்திருக்கிறது. திரைத்துறையாக இருந்தாலும், செய்தி நிறுவனங்கள், மீடியாவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கக் காரணம் மிக மிக நீண்ட வரலாற்றை கொண்டதாகும்.
சிந்தனை வளர்ச்சி தேவை!
வளர்ச்சி என்பது தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, நிதி வளர்ச்சி என்ப தற்காக மட்டுமல்லாமல், மனவளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியாக உயர்ந்திருக் கிறது. அத்தகைய சிந்தனை வளர்ச்சிக் கும் சேர்த்துத் தீனி போடுவதாக, ஊடகங்கள் வளர வேண்டும். பொழுது போக்கு ஊடகமாக மட்டுமல்லாமல், சிந்த னைக்கு தீனி போடுவதாக ஊடகங்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். திரையுலகம் தன்னை அனைத்து வகையிலும் புதுப்பிக்க வேண்டும். திரையுலகத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவும் தமிழக அரசு தயாராக இருக்கி றது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் முக்கிய உலகளாவிய மையமாக திகழத் தேவையான அனைத்தும் தென்னிந்தியாவில் இருக்கிறது. தற்போது குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் தாக்கம் இளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகமாக இருக்கின்ற காரணத்தால், அதுகுறித்த விழிப்புணர்வு வாசகங்க ளையும் வெளியிட வேண்டும். அதுமட்டு மல்ல, இன்றைய தலைமுறையினர் திரைப்படங்களை பார்த்து வளர்கிறார் கள். எனவே அதனை மனதில் வைத்துக் கொண்டு, சமூகத்திற்குப் பயனளிக்கும் முற்போக்கான திரைப்படங்களை எடுக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.