தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து கைது செய்யும் இலங்கை உடனடி நடவடிக்கை கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை, ஜூலை 29 - இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளை விடு விப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வலி யுறுத்தியும் ஒன்றிய அமைச்சருக்கு, முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட் டுள்ள நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர் களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவ டிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளி யுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தடையின்றி கைது செய்யப்படுவதை ஆழ்ந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், செவ்வாய்க் கிழமை (ஜூலை 29) காலை இராமநாதபுரம் மாவட் டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இயந்திர மயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதையும், மற்றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது நாட்டுப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப் பட்டுள்ளதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்றிருப்பதையும், அச்சம்பவத்தில் நான்கு மீனவர்கள் தங்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன், இதேபோன்று கைது செய்யப் பட்டதையும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த மாதத்தில் மட்டும் இது நான்காவது சம்பவம் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் தொடர்ச்சியான கைது நடவடிக்கை கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் மனரீதியான மற்றும் பொருளாதார நெருக்கடியை யும், வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்ப டுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது 235 மீன்பிடிப் படகுகளும், 68 மீன வர்கள் இலங்கை காவலில் உள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.