tamilnadu

img

தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் தடைகளை ஏற்படுத்தும்

சென்னை,ஏப்.29- செயற்கை இழைகள் மற்றும் விஸ்  கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக்  கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டா யச் சான்றிதழ் பெறும் நடைமுறையை இந்திய தர நிர்ணய அமைப்பு செயல்  படுத்தி வருவதால் ஏற்படும் பாதிப்புகள்  குறித்தும், இதுதொடர்பாக தமிழ்நாட்டி லுள்ள ஜவுளித் துறையின் பல்வேறு தரப்  பினரிடமி ருந்து வரும் கோரிக்கைகள் குறித்தும் ஒன்றிய அரசின் ஜவுளித் துறை  அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்வர்  மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- விஸ்கோஸ் இழைகள் தொடர்பாக, ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரக்  கட்டுப்பாட்டு ஆணைகளை நடை முறைப் படுத்த ஒரு மாதம் மட்டுமே கால  அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர்  இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்  ளது. அதேபோன்று, பாலியஸ்டர் இழைக் கான தரக் கட்டுப்பாட்டு ஆணை, ரசாய னங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத் தால் வழங்கப்பட்டு, இம் மாதத்திலிருந்து  நடைமுறைக்கு வந்துள்ளது.

பாலியஸ்டர் முழுமையாக நீட்டப்  பட்ட நூல், பாலியஸ்டர் பகுதி நீட்டப்பட்ட நூல், தொழில் துறைக்கான பாலியஸ்டர் நூல்  மற்றும் 100 விழுக்காடு பாலியஸ்டர் ஸ்பன் கிரே மற்றும் வெள்ளை நூல் ஆகி யவற்றைப் பொறுத்தவரையில், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் 3.7.2023 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பாகவே,  நாகரிக உடைமாற்றங்களுக்கான போக்குகள் திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப  மூலப் பொருட்கள் கொள்முதல் செய்  யப்படுவதற்கான ஆர்டர்கள் வழங்கப்  பட்டு வரும் சூழ்நிலையில், இந்தத் தரக்  கட்டுப்பாட்டு ஆணை, ஜவுளித்தொழி லில் தற்போது நடந்து வரும் பணிகளில் பெரும் தடைகளை ஏற்படுத்தும். தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் காரணமாக, விஸ்கோஸ் மற்றும் பாலி யஸ்டர் நூல்களில் தனித்துவமான பண்பு களைக் கொண்ட இழைகளின் கண்டு பிடிப்பு சாத்தியமாகி வரும் நிலையில், இத்தகைய இழைகளுக்கு பொதுவான தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் பொருந்தாது.  விஸ்கோஸ் இழையை பொறுத்த வரையில், இந்திய தர நிர்ணய அமைப்  பின் தர அளவீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்  ளது என்றாலும், பாக்டீரியா எதிர்ப்பு மற்  றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளால் ஏற்றுமதி சந்தையில் அதிக தேவையுள்ள மூங்கில் விஸ்கோஸ் இழைக்கென தர அளவீடுகள் எதுவும் இல்லை.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் மற்றும் பாலி யஸ்டர் இழைகளுக்கான பல விண்  ணப்பங்கள், இந்திய தர நிர்ணய அமைப்  பின் ஆய்வு மற்றும் ஒப்புதலுக்காக நிலு வையாக உள்ளதையும், இந்த அமைப் பின் அலுவலர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மேற்படி விண்ணப்பதாரர்களின் உற்பத்தி ஆலைகளுக்கு நேரில் சென்று  ஆய்வு செய்தால் மட்டுமே இது சாத்திய மாகும் என ஜவுளித்தொழில் துறையினர் முறையிட்டுள்ளனர். மேற்படி விநியோக நிறுவனங்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் தர  அளவீடுகளுக்கு முழுமையாக தகுதி  பெற்றிருந்தாலும், இந்திய தர நிர்ணய அமைப்பின் ஆய்வு மற்றும் ஒப்புதலின் அடிப்படையி லேயே மேற்படி இழை களின் இறக்குமதி நடைபெறும். இந்தச்  சூழ்நிலையில், இத்தகைய இழைகளை  இறக்குமதி செய்து வரும் பல ஜவுளித்  துணி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள், கணிசமான வணிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும். தேவையான, தரமான இழைகளை இறக்குமதி செய்வதில் ஏற்  படும் தாமதம் காரணமாக, மதிப்புக் கூட்  டப்பட்ட பொருட்களின் உள்நாட்டு உற் பத்தியாளர்கள், தரமான இழைகளை உபயோகப்படுத்த இயலாமல், அதன் மூலம் நீண்ட காலத்திற்கு வணிகத்தை இழக்க நேரிடும்.

தரக் கட்டுப்பாடு ஆணைகளை அமல்  படுத்துவதால் தரம் மேம்பட்டு, சுற்றுச்  சூழல் பாதுகாக்கப்பட்டு, அதன்மூலம்  “மேக் இன் இந்தியா” முன்னெடுப்பு களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது மிகவும் பாராட்டக் கூடிய ஒன்றாக இருப்பி னும், தரக் கட்டுப்பாடு ஆணைகளை அமல்படுத்துவதற்கு போதிய கால அவகாசம் வழங்கி ஜவுளித்தொழிலின் உரிமைகளும் பாதுகாக்க வேண்டும். பொதுவாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜவுளித்தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் உற்பத்தியாளர்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் பெறு வதற்கு தரப்பரிசோதனை மையங்களை  நிறுவுவது கட்டாயம் என்ற நிலையில், அதற்கான செலவினம் மிகவும் அதிகம்  என்பதால் குறு, சிறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களுக்கு இது சாத்தியமான தாக இல்லை. ஆகவே, இதனை கருத்தில் கொண்டு, இந்திய தர நிர்ணய அமைப் பின் ஆய்வு மற்றும் ஒப்புதலுக்காக காத்  திருக்கும் விண்ணப்பங்களின் மீது உரிய  நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே, தரக் கட்டுப்பாடு ஆணைகளை அமல்  படுத்தவும், இந்தியாவில் தயாரிக்கப் படாத - மூங்கில் மரத்தில் தயாரிக்கப்படும் விஸ்கோஸ் பஞ்சு, செயற்கை இழை பஞ்சு மற்றும் நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாடு ஆணைகளிலிருந்து விலக்கு  அளிக்கவும் ஏதுவாக, உரிய உத்தரவு களை ஒன்றிய ஜவுளித்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.