சென்னை,ஏப்.15- நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாதது வேதனை அளிக்கிறது எனத் தெரிவித் துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நேரில் சந்தித்து வலியுறுத்திய போது மசோதாவை அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித் தார். மசோதா பற்றி ஆளுநர் உறுதியான பதிலளிக்காததால் தேநீர் விருந்தில் பங்கேற்பது முறையாக இருக்காது. ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும் சுமுகமாகவும் இருக்கும் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் நலன், அரசியல் அமைப்பு சட்டப்படி கடமையை செய்யும்போது மக்க ளும் மாநிலமும் வளம் பெறும் என்றும் முதல மைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார்.