சென்னை, மே 25- பணி ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு செப். 22 இல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்ட டி.ராஜா மே 24 ஆம் தேதி யோடு பணி ஓய்வுபெற்றார். அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற கலை யரங்கில் நடைபெற்ற விழாவில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை வாழ்த்திப் பேசினார். பின்னர் நீதிபதி டி.ராஜா பேசியதாவது:- இளம் வழக்கறிஞர்கள் உச்ச நீதி மன்றம், உயர் நீதிமன்றம் என எங்கு பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தாலும், அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஆங்கிலப் புலமையை கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றி கரமான வழக்கறிஞர்களாக வலம் வர முடியும். நீதிமன்றங்களில் வாதங்களை உன்னிப்பாக கவனித்து, சட்டப் புத்தகங்களை அதிகம் படித்தால், இளம் வழக்கறிஞர்களுக்கு வானமே எல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி கள், வழக்கறிஞர்கள் திரளாகப் பங்கேற்றனர். பொறுப்பு தலைமை நீதிபதி யாக பதவி வகித்த டி.ராஜா, புதுக் கோட்டை மாவட்டம், வேங்கை வயல் விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் அமைக்க உத்தர விட்டது, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக தாழ்தளப்பேருந்துகளை அதிகம் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது, கூட்டுறவு சங்கங்களுக்கு 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது என பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். சொந்த மாநிலத்தில் நீண்ட காலம் பொறுப்பு தலைமை நீதிபதி யாக பதவி வகித்தவர் என்பதும், அதிக எண்ணிக்கையில் புதிய நீதிபதி களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.