சென்னை, ஜூலை 28- செஸ் உலகின் மிகப்பெரிய திருவிழாவான 44 வது சர்வதேச சதுரங்க போட்டி (செஸ் ஒலிம்பியாட்) சென்னை நேரு உள் விளை யாட்டு அரங்கில் வியாழனன்று (ஜூலை 28) பாரம்பரிய கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 1775 வீரர்கள், 169 குழு தலைவர்கள், 250 நடுவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜொலித்தது அரங்கம்!
தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச் சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஒலிம்பி யாட் போட்டி தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் ஆங்காங்கே செஸ் காய்கள் அணி வகுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. அரங்கின் நுழைவு வாயில், மேடை அரங்குகள் முழுவதும் செஸ் காய்களின் அலங்காரம் ஜொலித்தது. ஒட்டுமொத்த அரங்கமே பல வண்ண டிஜிட்டல் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது. மேடையின் தரை யில் “தமிழ்த்தாய் வாழ்த்தை” மின்னொளியில் ஒளிரச் செய்தனர்.
களை கட்டியது விழா!
செஸ் காய்கள் அணிவகுப்பு போல் மிக நேர்த்தியான அலங்கார வளைவுகளும், தோரணங்களும், ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான தம்பி உருவ பொம்மைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு மாநில நடனக் கலைஞர்கள் கண்கவர் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். வீரர்களின் கொடி அணி வகுப்பு ஒத்திகை யும் நடந்ததால் நேரு உள் விளையாட்டரங்கம் காலை முதலே களை கட்டியது. தமிழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் படக்காட்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா வியாழனன்று மாலை துவங்கியது. இந்த விழாவில் 186 நாடுகளின் வீரர்களின் அணிவகுப்பு அகரவரிசைப்படி நடந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பன்முகத் தன்மை, கலாச்சாரம் ஆகியவற்றை பிரதி பலிக்கும் வகையில் 8 மாநிலங்களைச் சார்ந்த நடனக் கலைஞர்கள் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்ட நட னங்களை நடத்திக்காட்டியது பார்வையாளர் களையும் வீரர்களையும் பரவசமூட்டியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரம்பரிய வேட்டியும் - சட்டை யும் அணிந்து பங்கேற்றது அரங்கத்தில் உள்ளவர்கள் கரவொலியால் அதிரச் செய்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இயக்குநர் விக்னேசுடன் உருவாக்கிய பாடல் ஒலித்தது.
ஒலிம்பியாட் தீபம்
கிரீஸ் நாட்டின் பழமையான நகரமான ஏதென்ஸ் நகரில் இருந்து தொடங்கப்படுகிறது. அதைப் போன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதன்முறையாக சுடர்ப் பயணம் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு இறுதியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த தொடக்க விழாவில் இந்தியாவில் முதல் முறையாக என்ற பெருமையுடன், உலகை வியக்க வைக்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழா வில் ஒலிம்பியாட் தீபத்தை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் விளை யாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆளுநர் ரவி, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அர்கடி துவார்கோவிச், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரைக்கலைஞர் ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மட்டுமின்றி வெளி நாட்டு வீரர்களும் முக்கிய விருந்தினர்கள் பலரும் வருகை தந்ததால் சென்னை மாநகரம் முழுவதும் ஏழடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. கடலோரப் பகுதியும் கண்காணிப்பு வளை யத்திற்குள் கொண்டுவரப்பட்டது.