சென்னை,அக்.22- 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து, நியூ சிலாந்து, பாகிஸ்தான், வங்க தேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திங்களன்று (அக்.23) நடை பெறுகிறது. இதற்காக சென் னைக்கு வந்தடைந்த பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விமான நிலை யத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் வருகை யையொட்டி விமான நிலையத்தில் காவல் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 11 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ் தான் அணி சென்னை வருவது குறிப்பிடத்தக்கது.