கும்பகோணம், ஜன.23 - தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்க தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மாநிலத் தலைவர் வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், பொருளாளர் ஏழுமலை, மாநில செயலாளர் தங்க.காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நட ராஜன், தஞ்சை மாவட்டத் தலை வர் செந்தில்குமார், திரு மண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவ சாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திரு மண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து இதுவரை வழங்கப்படா மல் இருக்கிற கரும்பு கிரயத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து, கரும்பு ஆதார விலையை மாநில அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பூட்டப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் கோ ரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்து வது.
ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் நடைபெற்ற தில்லி விவசா யிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழு வதும் மாவட்ட தலைநகரங்களில் ஜனவரி 26 அன்று நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணி யிலும், ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தில்லியில் நடை பெறும் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்வது. கடந்த 2022 நவம்பர் 30 முதல் தொடர்ந்து 54 நாட்களாக போராடி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு ஆதார விலை, கரும்பு கிரய தொகை, ஆலையின் லாபத்தில் பங்கீட்டுத் தொகை உள்ளிட்ட அனைத்தையும் வட்டி யுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் மோசடியாக வங்கியில் பெற்ற கடனை உடனடியாக திரும்பச் செலுத்தி, கடன் இல்லா சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.