tamilnadu

சென்னை எல்லை விரிவாக்கம்: 5 புதிய பணிமனைகள் தேர்வு

சென்னை எல்லை விரிவாக்கம்:  5 புதிய பணிமனைகள் தேர்வு

சென்னை,அக்.22- சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக, ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க மாநகர போக்குவரத்து கழகம் இடங்களை தேர்வு செய்துள்ளது. தற்போது சென்னையில் 700 வழித் தடங்களில் 3,233 பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக உயர்த்தப்பட்டது டன், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவ ளம், திருப்போரூர், மாமல்லபுரம், திரு பெரும்புதூர் என மாநகர போக்கு வரத்து கழகத்தின் எல்லை விரிவடைந் துள்ளது. இருப்பினும் போதிய அளவில் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். கிளாம்பாக்கத்தைத் தொடர்ந்து குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலை யம் விரைவில் திறக்கப்பட உள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழக அதி காரிகள் கூறியதாவது: சென்னை புற நகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால் பேருந்துகளின் தேவை அதிகமாக உள்ளது. வரும் 2032-ல் மாநகர பேருந்துகளின் தேவை  7,578 ஆக இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது. திருவள்ளூர், வெளிவட்ட சாலை பகுதியில் வரதராஜபுரம், தையூர், தர மணி, பாடியநல்லூர் அருகில் ஆட்டங் தாங்கல் ஆகிய ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க தேர்வு செய்ய ப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்க உள்ளன. இதை யடுத்து டெண்டர் வெளியிட்டு, பேருந்து பராமரிப்புக்கான அதி நவீன கருவிக ளுடன் புதிய பணிமனைகள் கட்டப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.