பல நூற்றாண்டுகளாக பிரான்ஸ் ஏகாதிபத்தியம் மற்றும் மேற்கு நாடுகளால் சுரண்டப்பட்டு வரும் ஆப்பிரிக்காவின் புர்கினோ பாசோ நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த ‘ஆப்பிரிக்காவின் சேகுவேரா’ கேப்டன் தாமஸ் சங்காரா நினைவு தினம் இன்று. 1987 ஆண்டு அக்டோபர் 5 அன்று நடந்த ஒரு சதியால் தாமஸ் சங்காரா படுகொலை செய்யப்பட்டார். ஏகாதிபத்தியதால் சுரண்டப்பட்ட புர்கினோ பாசோ மக்களின் ஏழ்மையை ஒழித்து, அவர்களின் வாழ்வில் ஒளிவீசச் செய்ய போராடிய முக்கிய இடதுசாரித் தலைவர் தான் தாமஸ் சங்காரா. விடுதலைக்கான முழக்கத்துடன் அவரது இடதுசாரி சோசலிச சிந்தனை மக்களை வெகுவாக கவர்ந்தது. புர்கினோ பாசோ இளைஞர்களுக்கு சங்காரா தான் சேகுவேரா. 1949-ம் ஆண்டு பிறந்த அவர், ஊழல் இல்லாத, மேற்கு நாடுகளின் சுரண்டல் இல்லாத ஆப்பிரிக்காவை உருவாக்க தனது வாழ்வை அர்ப்பணித்தார். கியூபாப் புரட்சி தான் அவரது உத்வேகம். தனது நாட்டையும், நாட்டு மக்களையும் நேசித்த அவர் தனது முழு வாழ்வையும் அவர்களுக்காக அர்ப்பணித்தார். தனது மக்கள் எவரொருவராலும் சுரண்டப்படுவதை அவர் வெறுத்தார். சங்காரா பதவியிலிருந்தது நான்கு ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அதுவே மேற்குலகம் அவரைப் பார்த்து மிரள்வதற்கு போதுமானதாக இருந்தது.
இன்று (அக்.15) தோழர் தாமஸ் சங்காரா நினைவுதினம்