tamilnadu

img

மதுரை ஆட்சியரை மாற்ற...

தேர்தல் அளித்த அறிக்கையில் எந்த விவரங்களும் இல்லை என்றும் கூறினர்.


நியாயமான நேர்மையான தேர்தல் என்றால் யார் வேண்டுமானாலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சுதந்திரமாக சென்றுவரலாமா என்றும் கேள்விகேட்டனர். வட்டாட்சியர் சென்றபோது காவல்துறை துணை ஆணையர் ஏன் அங்கு பாதுகாப்பு பணியில் இல்லை என்றும் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர்.


இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுவது மட்டும்தானா தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் பணியா? அவருக்கு இவ்வளவுதான் அதிகாரம் தரப்பட்டுள்ளதா? இந்த அளவுக்கு அதிகாரம் இல்லாத பதவியா அந்தப் பதவி என்றும் நீதிபதிகள் கோபமாக கேட்டனர்.வட்டாட்சிரை தடுத்துநிறுத்தவோ அல்லது சோதனையிடவோ வேண்டாம் என்று உயர்மட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததா? என்றும் காட்டமாக கேட்டனர். அப்போது உரிய பதில் அளிக்கமுடியாமல் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் திணறினார்.


வேட்பாளர் புகார் தெரிவித்த பின்னரும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்காதது ஏன் ஏன்று வினவினர். பாதுகாப்பு விஷயத்தில் வேண்டுமென்றே கவனக்குறைவாக நடந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் அதிகாரி,காவல்துறை உதவி ஆணையர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர்.மேலும் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் குற்றவியல் வழக்கு தொடரவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.பின்னர் இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 30 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.இந்த வழக்கில் வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

;