புதுதில்லி, ஜன. 19 - ஜிஎஸ்டி இழப்பீட்டை நிறுத்தியதால் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் நிதிநிலைமை பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது. மாநிலங்களின் நிதி நிலை குறித்து ரிசர்வ் வங்கி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலங் களின் நிதி நிலை மற்றும் நிதி நிலைக் கான சிக்கல்கள் குறித்து பல்வேறு தக வல்களை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில்தான், ஜிஎஸ்டி இழப்பீட்டு திட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்துவ தால் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ் டிரா, குஜராத் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட குறைந்தது 10 மாநிலங்கள், அவர்களின் பட்ஜெட் மதிப்பீட்டின்படி, எதிர்பார்க்கப்படும் 14 சதவிகித ஜிஎஸ்டி வளர்ச்சியில் இருந்து குறைவைச் சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஜிஎஸ்டி இழப்பீட்டு முறை யின் 5 ஆண்டுக் கால வரம்பு முடி வடைந்த நிலையில், கடந்த 2022 ஜூன் மாதத்துடன் வருவாய் இழப்பீடு நிறுத்தப் பட்டுவிட்டது. கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களே அதிக பட்ச ஜிஎஸ்டி இழப்பீடு பெற்றுள்ளன என்பதால், ஜிஎஸ்டி இழப்பீட்டை நிறுத்துவதால் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதிலும், ஜிஎஸ்டி இழப்பீட்டு முறையின் முடிவு காரணமாக, மிகவும் மோசமாக பாதிக்கப்படக்கூடிய மாநி லங்களாக புதுச்சேரி, பஞ்சாப், தில்லி, இமாச்சலப் பிரதேசம், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்கள் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி மதிப் பிட்டுள்ளது. ஏனெனில், இந்த மாநிலங் களுக்கான வரி வருவாயில் ஜிஎஸ்டி இழப்பீட்டின் பங்கு சராசரியாக 10 சதவிகிதத்திற்கும் அதிகமாகும். மேலும், இந்த 6 மாநிலங்கள் உட்பட மொத்தம் 10 மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட 14 சதவிகிதத்தை விட கீழே சரியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.