tamilnadu

img

30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த விழா

30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த விழா

கச்சநகரம் ஊராட்சியில்

நாகப்பட்டினம், ஜூன் 10- நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கச்சநகரம் கிராமத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த விழா நடைபெற்றது. தலைஞாயிறு ஒன்றியம் கச்சநகரம் ஊராட்சியில் சிபிஎம் கிளைச் செயலாளர் எம்.சின்னதுரை தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டன.  இது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் முழுமையாக வசிக்கும் கிராமம். 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஏற்கனவே இந்த கிராமமானது, மார்க்சிஸ்ட் கட்சிக்கு பலம் சேர்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போது 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளன. கட்சியில் இணைந்தவர்களுக்கு சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து சால்வை அணிவித்து, வரவேற்றார். தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் வி.ராஜகுரு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.